Tag Archives: பழவந்தாங்கல்

அருள்மிகு தணிகை வேம்படி சக்தி விநாயகர் திருக்கோயில், பழவந்தாங்கல்

அருள்மிகு தணிகை வேம்படி சக்தி விநாயகர் திருக்கோயில், பழவந்தாங்கல், சென்னை.


தணிகை வேம்படி சக்தி விநாயகர் திருக்கோயில் சென்னை பழவந்தாங்கலில் குமரன் தெருவில் இருக்கிறது. தணிகை வேம்படி விநாயகர் என்று பெயர் வரக் காரணம் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ந்தேதி முருகன் தலங்களில் வெகு விமரிசையாக நடக்கும் படி உற்சவத்திற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அரசு அதிகாரிகள், ஊர் பெரியவர்கள் மரியாதை நிமித்தமாக ஆங்கிலேய அதிகாரிகளை சந்தித்துப் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டியது மரபாக இருந்தது.

ஆங்கிலேயரிடம் வேலை செய்தாலும் புத்தாண்டு தினத்தில் கை கட்டி நிற்க விரும்பாத அரசு ஊழியர்கள், ஊர் பெரியவர்கள் இந்த தர்ம சங்கடத்தைத் தவிர்க்கும் விதமாக உருவாக்கியதுதான் படி உற்சவம்.