Category Archives: மகாராட்டிரம்

அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில், செமினரி ஹில்ஸ்

அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில், செமினரி ஹில்ஸ், நாக்பூர் மாவட்டம், மகாராஷ்டிர மாநிலம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர் முருகப்பெருமான், வெங்கடேசப் பெருமாள்
அம்மன் வள்ளி, தெய்வானை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் செமினரி ஹில்ஸ்
மாவட்டம் நாக்பூர்
மாநிலம் மகாராஷ்டிரா

நாக்பூரில் மோதிபாக் ரயில்வே காலனி இருக்கிறது. காலனியின் மைதானத்தில் ஒரு வேல் நடப்பட்டு பூஜை நடந்து வந்தது. அப்பகுதியிலுள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து சிறிய கோயில் ஒன்றை அந்த இடத்தில் உருவாக்கினர். இடப்பிரச்னை காரணமாக அங்கிருந்த கோயில் செமினரி ஹில்ஸ் என்ற மேடான இடத்தில் கட்டப்பட்டது. அந்த பகுதி சேட்கள் ஒன்றிணைந்து இந்த கோயிலை எழுப்பினர். தமிழகத்திலிருந்து வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சிலை, நவக்கிரகங்கள் ஆகியவை வரவழைக்கப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டன.

பின்னர் சேட்களின் கோரிக்கையின் பேரில் கோயிலை இரண்டு தளங்களாக அமைக்க முடிவு செய்தனர். கீழே பாலாஜியும், மேல் தளத்தில் முருகப் பெருமானையும் ஸ்தாபனம் செய்ய முடிவெடுத்தனர்.

அருள்மிகு மும்பாதேவி கோயில், மும்பை

அருள்மிகு மும்பாதேவி கோயில், மும்பை -400 002, மகாராட்டிர மாநிலம்
*********************************************************************************

+91 22 2242 4974 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மும்பாதேவி

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – முங்கா

ஊர்: – மும்பை

மாவட்டம்: – மும்பை

மாநிலம்: – மகாராட்டிரம்

ஒரு காலத்தில் மும்பையைச் சுற்றியிருந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது இயற்கையின் சீற்றங்களால் மிகவும் அல்லல்பட்டனர். அதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இறைவனை வேண்டினர்.

பராசக்தியான அம்பிகை அவர்களுக்கு அருள்புரிந்தார். இயற்கைச் சீற்றம் தணிந்தது. “முங்காஎன்ற மீனவ இனத்தினர் அம்பிகைக்கு கோயில் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு கதையின்படி முங்கா என்பவர்கள் மீனவ பெண்கள் என்றும், தங்கள் கணவன்மார் கடலுக்குசென்றுவிட்டு நல்லபடியாகத் திரும்ப அம்பிகையை வேண்டியதாகவும், முங்கா என்ற பெயர் நாளடைவில் திரிந்து மும்பா என மாறிவிட்டதாகவும் தெரியவருகிறது. இந்த தேவியின் உண்மையான பெயர் முங்கா தேவிஎன இருந்தது. காலப்போக்கில் மும்பா தேவிஎன மாறிவிட்டது.