Tag Archives: மணலூர்

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், மணலூர்

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், மணலூர்-614 202, தஞ்சாவூர் மாவட்டம்
*************************************************************************************************

+91 93448 14071(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – மணலூர்

மாவட்டம்: – தஞ்சாவூர்

மாநிலம்: – தமிழ்நாடு

காவிரி, கொள்ளிடம் நதிகள் ஓடும் மணலூரில், மழைக்காலத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்கள் பலர் அவதிக்குள்ளாகினர். மழையால் மக்களுக்கு தொல்லை உண்டாகக்கூடாது என்றெண்ணிய இப்பகுதியை ஆண்ட சிற்றரசர், மழை தரும் கடவுளான மாரியம்மனை வேண்டினார். உடன் மழை நின்று வெள்ளம் வடிந்தது. இதனால், மகிழ்ந்த சிற்றரசர் இங்கு மாரியம்மனுக்கு கோயில் எழுப்பினார். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணல்கள் அதிகம் இருந்ததால் இவ்வூர் மணலூர்எனப்பட்டது.