Tag Archives: தாம்பரம்

அருள்மிகு கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், தாம்பரம்

அருள்மிகு கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் வழியில் மகாரண்யம் கிராமம், மதுரபுரி ஆசிரமம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 44-2489 5875, 3710 4183 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இராமாயண காவியத்திலே நடுநாயகனாக இருந்து பல அசுர சாதனைகளைப் புரிந்தவர் ஸ்ரீஆஞ்சநேயர். ஸ்ரீஆஞ்சநேயர் ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால், கொஞ்சமும் மன சஞ்சலமில்லாமல் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் சிறப்பாகச் செய்து போய்க்கொண்டே இருப்பார். சாதனை புரிவதில் இவருக்கு நிகரானவர் இவரே! சமுத்திரம் எவ்வளவு பெரியது. அதைத் தாண்டி இருக்கிறார். சஞ்சீவி மலையை அடியோடு பெயர்த்தெடுத்திருக்கிறார். அந்த மலையை ஆகாயத்திலே தூக்கிக்கொண்டு பறந்து வந்திருக்கிறார். இலங்காபுரியையே எரித்துச் சாம்பலாக்கினார். ஸ்ரீராமபிரானையும் அன்னை சீதாதேவியையும் சேர்த்து வைத்திருக்கிறார். ஸ்ரீராம சேவை என்றால், ஸ்ரீஆஞ்சநேயரைப் போல பயபக்தியுடன் அந்த பகவானுக்கு வேறு எவரும் அப்படிச் சேவை செய்திருக்க முடியாது. இவர் புத்திமான் மட்டுமல்ல. சிறந்த பக்திமான். சாந்த குணம் இருந்தது. கோபம் கிடையாது. இந்திரியங்களை அடக்கும் சக்தி இருந்தது. அதனால் எதனிடமும் மோகமில்லை. கூர்மையான அறிவு இருந்தது. அது நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மனதைக் கட்டுப்படுத்தி ஒரு வைராக்கியமுடன் எந்த நேரமும் ஸ்ரீராம நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தவர்.

அருள்மிகு சித்தர் திருக்கோயில், தாம்பரம், சென்னை

அருள்மிகு சித்தர் திருக்கோயில், தாம்பரம், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44-2493 8734 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காமேஸ்வரன்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தாம்பரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சித்தர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆன்மிக உலகத்திற்கு பெரும் ஆர்வம் உண்டு. சென்னை தாம்பரம் அருகேயுள்ள மாடம்பாக்கத்தில் 18 சித்தர்களையும் ஒருசேர வழிபடும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் பச்சைக்கல்லால் அமைக்கப்பட்டுள்ள மகாமேரு மலை சிவசக்தி வடிவமாக கருதப்பட்டு வணங்கப்படுகிறது. ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சித்தரை வழிபடும் முறை உள்ளது. அவர்களுக்குரிய பூக்கள், நைவேத்தியம், வஸ்திரம் கொண்டு வழிபடுவது சிறப்பு.

இத்தலத்தில் பச்சைக்கல்லால் அமைக்கப்பட்டுள்ள மகாமேரு மலை அகிலாண்டேஸ்வரியாகவும், இதிலுள்ள மரப்பலகை காமேஸ்வரன், காமேஸ்வரியாகவும் கருதப்படுகிறது.