Tag Archives: அணைப்பட்டி

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், அணைப்பட்டி

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், அணைப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

மூலவர் வீரஆஞ்சநேயர்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் அணைப்பட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையநாயக்கனூர் ஜமீன்தாரான காமயசாமியின் கனவில் வீர ஆஞ்சநேயர் தோன்றி, வேகவதி ஆற்றின் தென்கரையில் (வைகை ஆற்றின் புராணப்பெயர்) தாழம்பூ புதருக்குள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதாககவும், ஆலயம் அமைத்து வழிபடும்படியும் கூறினார். ஆஞ்சநேயரின் கட்டளைப்படி புதரைச் சுத்தம் செய்து பார்த்த போது சிறிய பாறை தென்பட்டது. அதை தோண்டி எடுக்க முயன்றும் முடியவில்லை. அதுவே வீர ஆஞ்சநேயராக, சுயம்புவாக மாறியது. பின்னர் அந்த இடத்தில் கோயில் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

வாயு மைந்தனான ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போதே சூரிய பகவானை பழம் என்று நினைத்து அதைப்பறிக்க வானில் தாண்டிக்குதித்தவர். இராமனின் அடிமையாக திகழ்ந்த இவர் ஸ்ரீராமஜெயம்எழுதுபவர்களைப் பல இன்னல்களிலிருந்து காக்கிறார். இராமாயணமோ அல்லது இராமனின் பெருமைகளோ கூறும் இடங்களில் எல்லாம் அனுமன் இருப்பார். அந்த அளவுக்கு இராமர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்.