Tag Archives: பெரம்பூர்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரம்பூர்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரம்பூர், தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 -253 202, 94866 31196

(மாற்றங்களுக்குட்பட்டவை)

மூலவர்

சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்

முருகன்

அம்மன்

வள்ளி, தெய்வானை

தலவிருட்சம்

பிரம்பில்

தீர்த்தம்

புஷ்கரணி

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

பிரம்ம மங்களபுரம்

ஊர்

பெரம்பூர்

மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

தட்சனின் மகளாக தாட்சாயணி என்னும் பெயரில் பார்வதிதேவி பிறந்து சிவனை மணந்தாள். ஒரு சமயம் தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். இதில் பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் கலந்து கொண்டார். இதனால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. பிரம்மா சிவனிடம் சாப விமோசனம் வேண்டினார். மனமிரங்கிய சிவன் பூலோகத்தில் தீர்த்தம் உண்டாக்கி என்னை வழிபட்டால் சாபம் நீங்கும் என்றார். அதன்படி வழுவூர் என்னுமிடத்தில் வீரட்டேஸ்வரர் என்னும் பெயரில் சிவலிங்கம் எழுப்பி வழிபட்டு பிரம்மா சாபம் நீங்கப்பெற்றார். அத்துடன் இத்தலத்தின் அருகில் உள்ள பிரம்ம மங்களபுரத்தில் (பெரம்பூர்) தந்தைக்கு உபதேசம் செய்த சுப்பிரமணியரை வணங்கி ஞான உபதேசமும் பெற்றார்.

தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் அழித்தார். மயிலாகவும், சேவலாகவும் மாறிய சூரபத்மன் முருகனின் ஞான உபதேசம் பெற விரும்பினான். பிரம்மனுக்கும், மயிலுக்கும் முருகன் ஞான உபதேசம் செய்ததால், இத்தல முருகன் ஞான குருவாக விளங்குகிறார். பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்கு முருகனின் இடது பக்கம் திரும்பியிருப்பது சிறப்பம்சமாகும்.