Tag Archives: கொட்டையூர்

அருள்மிகு கோடீஸ்வரர் (கைலாசநாதர்) திருக்கோயில், கொட்டையூர்

அருள்மிகு கோடீஸ்வரர் (கைலாசநாதர்) திருக்கோயில், கொட்டையூர், தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டம்.

+91 435 245 4421 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 3 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோடீஸ்வரர், கைலாசநாதர்
அம்மன் பந்தாடு நாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் அமுதக்கிணறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கொட்டையூர், கோடீச்சரம், பாபுராஜபுரம்
ஊர் கொட்டையூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

திரிகர்த்த தேசத்தை ஆண்டவர் சத்தியரதி. இவரது மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான். இவனது உருவைக்கண்டு ஊரே நடுங்கி ஓடியது. தன்னைக் கண்டாலே ஓடும் மக்களை தன்வசம் மீண்டும் இழுக்க அவன் சிவபெருமானை வணங்கினான். அவரது அருளாசியின்படி கொட்டையூர் என்ற தலத்திற்கு சென்று வணங்கும்படி கூறினார். அவனும் கொட்டையூருக்கு வந்து இங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கினான். இந்த தீர்த்தம் ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது. இதை அமுதக்கிணறு என்கிறார்கள். இந்தக் கிணற்று நீரில் நீராடி முன்பைவிட வனப்பான உருவம் பெற்றான். இப்போதும் இந்தக்கிணறு இங்கு உள்ளது. பல பெண்கள் இந்தக்கிணற்று நீரை தங்கள் தலையில் தெளித்து அழகிய வடிவம் பெறலாம் என நம்புகிறார்கள். கல்வி அபிவிருத்தியை தரும் தீர்த்த ஸ்தலம். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம்.

ஆமணக்கு கொட்டைச்செடியின்கீழ் இலிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர்என்று பெயர் பெற்றது. பத்திரியோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தன்னுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர்எனப்பட்டார்.