Tag Archives: திருவண்வண்டூர்

அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்

அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர் – 686 109. ஆழப்புழை மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 94461 93002 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 4.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாம்பணையப்பன் (கமலநாதன்)
தாயார் கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம் பம்பை தீர்த்தம்
ஆகமம்/பூசை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவண்வண்டூர்
மாவட்டம் ஆழப்புழா
மாநிலம் கேரளா

ஒரு முறை பிரம்மனுக்கும் நாரதருக்கும் வாக்குவாதம் உண்டாகிறது. இதில் நாரதனை பிரம்மா சபித்து விடுகிறார். இதனால் வருத்தமடைந்த நாரதர் பிரம்மனை விட்டுப் பிரிந்து இத்தலம் வந்து பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்து, சகல சிருஷ்டிகளையும் பற்றிய தத்துவ ஞானத்தை தனக்கு போதிக்க வேண்டுமென வேண்டுகிறார். இவரது தவத்தால் மகிழ்ந்த பெருமாள் வேண்டிய வரம் தந்தருளினார். எனவே பெருமாளே அனைத்தும் என்றும், அவரை வழிபடும் முறை மற்றும் துதிப்பாடல்கள் அடங்கியதாக நாலாயிரம் அடிகள் கொண்ட நாரதீய புராணம்என்ற நூலை இத்தலத்தில் நாரதர் அருளியதாக வரலாறு கூறுகிறது.