Tag Archives: இலத்தூர்

மதுநாதசுவாமி திருக்கோயில், இலத்தூர்

அருள்மிகு இலத்தூர் மதுநாதசுவாமி திருக்கோயில், இலத்தூர், திருநெல்வேலி மாவட்டம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மதுநாதசுவாமி
தல விருட்சம் புளியமரம்
தீர்த்தம் அனுமன் ஆறு
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இலைத்தூர்
ஊர் இலத்தூர்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

உலக முதல்வனான சிவபெருமானுக்கும், பார்வதிக்கும், திருக்கைலாயத்தில் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்ததால், பூமி நிலை குலைந்தது. இதையறிந்த சிவபெருமான் குள்ள முனிவரான அகத்தியரைத் தென்திசைக்குச் சென்று பூமியை சமப்படுத்த வேண்டினார். அகத்தியர் தென்திசை நோக்கி வந்த போது அனுமன் ஆறும் குறுக்கிட்டது. அந்த ஆற்றில் நீராடி மணலால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது, இலிங்கம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த புளியமரத்திலிருந்து தேன் வடிந்தது.

அகத்தியர் மரத்தின் உச்சியைப் பார்த்தபோது தேன்கூடு ஒன்றைக் கண்டார். சற்று நேரத்தில் இலிங்கத்தின் மீது தேன் கொட்ட ஆரம்பித்தது. இதன்பிறகு மணல் இலிங்கம் இறுகி கல் இலிங்கம் போல் மாறி விட்டது. அதத்தியர் அந்த காட்சியைக் கண்டு மதுநாதா என அழைத்தார். தேனுக்கு மது என்ற பெயரும் உண்டு. தமிழ் வளர்த்த அகத்தியர் உருவாக்கி வழிப்பட்ட இலிங்கம் உடைய கோயிலே மதுநாதசுவாமி கோயில் ஆகும். புளியமரத்தின் இலையின் தூரிலிருந்து தேன் வடிந்ததால் இவ்வூர் இலைத்தூர் என்றாகி காலப்போக்கில் இலத்தூர் ஆனது.