Tag Archives: திருவாலங்காடு

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் உடனுறை வண்டார்குழலி திருக்கோயில், திருவாலங்காடு

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் உடனுறை வண்டார்குழலி திருக்கோயில், திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம்.

+91 – 4118 – 272 608 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை திறந்து இருக்கும்.

மூலவர் வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான்
அம்மன் வண்டார்குழலி
தல விருட்சம் பலா மரம்
தீர்த்தம் முத்தி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவாலங்காடு
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர்

சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது இரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, “நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார்.

அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார். இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது எனத் தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,”என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின், என்னை வழிபட்டால் தான் முழுப் பலன் கிடைக்கும்என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனிக் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.