Tag Archives: ஒட்டன்சத்திரம்

அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம்

அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம் – 624 619, திண்டுக்கல் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – அன்னகாமு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஒட்டன்சத்திரம்

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

பழங்காலத்தில் மூங்கில் மரத்தடியில் அரளிச் செடிகளுக்கு நடுவில் சிறிய அளவில் காமாட்சியம்மன் அருள் பாலித்துள்ளார். அதனால் மூங்கிலடி அன்னகாமுஎன்று அழைக்கப்பட்டாள். இதற்கான ஆதாரம் கோயில் கல்வெட்டுக்களில் இன்றும் உள்ளது.

1942-ம் ஆண்டு தும்மிச்சம்பட்டியை சேர்ந்த பெரியாக்கவுண்டர் என்பவரின் சொந்த பராமரிப்பில் இக்கோயில் இருந்துள்ளது. அவர் காமாட்சியம்மனுக்கு காவல் தெய்வமான கருப்பணசாமி சிலையை உருவாக்கி நிறுவியுள்ளார்.