அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில், முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு

அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில், முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்

+91 – 422 – 234 0462, + 91- 4253 292 860

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை நடைதிறந்திருக்கும்.

மூலவர்

முருகன்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு

மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

முருகப்பெருமான் ஒருமுறை தன் மயில் வாகனத்தில் இவ்வுலகை வலம் வந்தார். அப்போது அவரது கிரீடத்திலிருந்து முத்து ஒன்று உதிர்ந்து கீழே விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காகக் கீழே இறங்கியவர், இம்மலையில் கால் பதித்ததால் இது முத்துமலைஎன்றாகி விட்டது. ஒருமுறை இந்த ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் கனவில் முருகப்பெருமான் தோன்றி,”இந்த மலையில் மூன்று காரைச்செடிகள் வரிசையாக இருக்கும். அந்த இடத்தில்தான் நான் சிலை வடிவில் இருக்கிறேன்என்றார். இதனை அப்பெண் ஊர் மக்களிடம் தெரிவித்தும் அவர்கள் நம்பவில்லை. பின்பு, இதேபோல் தொடர்ந்து 3 கார்த்திகை தினத்திலும், பரணி நட்சத்திரத்திலும், அப்பெண்ணின் கனவில் தோன்றி முருகன் தொடர்ந்து கூற, அந்த பெண்ணே நேரடியாக இந்த மலைக்கு வந்து காரைச்செடிகள் இருப்பதைக்கண்டு பரவசமடைந்தார். இதன் பிறகு தான் ஊர் மக்களுக்கு நம்பிக்கை வர ஆரம்பித்தது. இதை தொடர்ந்து முருகனின் சக்திவேல் நடப்பட்டு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பூஜை செய்யப்பட்டது. அதன் பின் திருப்பணிக்குழு அமைத்து முன் மண்டபம் மற்றும் கர்ப்பக்கிரகம் கட்டி முடித்து, சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அறுபடை வீடுகளில் ஐந்தில் குன்றில் இருக்கும் முருகப் பெருமான் இன்னும் பல மலைகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். கேரள எல்லையில், கோயம்புத்தூர் அருகே உள்ள முத்துக்கவுண்டனூர் முத்துமலையிலும் முருகன் அருள்பாலிக்கிறார். தைப்பூசத்திருநாளில் வேலுடன் நிற்கும் இந்த முருகனைத் தரிசித்தால் நமது வினைகள் எல்லாம் அகலும். கோயிலின் அருகே உள்ள புற்றில் ஒரு விசேஷம் உள்ளது. இரவு நேரத்தில் இந்த புற்றில் இருந்து ஒரு ஒளிக்கீற்று கிளம்புவதைக் காண்பதாக பக்தர்கள் பரவசப்படுகிறார்கள்.

திருவிழா:

மாதம் தோறும் கார்த்திகை திருவிழா சிறப்பாக நடக்கிறது. தைப்பூசத்தன்று விசேஷ பூஜை, பங்குனி உத்திர திருநாளில் தேரோட்டம் ஆகியவை நடக்கிறது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காவடி ஆட்டம், அன்னதானம் நடக்கிறது.

வேண்டுகோள்:

குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமண தடை நீங்கவும் பக்தர்கள் முருகனை வழிபட்டுப் பலனடைகிறார்கள். நினைத்த காரியங்கள் நடக்கிறது என்றும், மனதிற்கு நிம்மதியும் தெம்பும் கிடைக்கிறது என்றும் பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பொருள் வசதி படைத்தோர் அன்னதானம் செய்யலாம். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *