அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில், சோலைக்கவுண்டன்பட்டி

அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில், சோலைக்கவுண்டன்பட்டி, விருதுநகர் மாவட்டம்.

+91- 4562 – 394 299, 324 299, 94889 62220

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருவேங்கடமுடையான் (சீனிவாசப்பெருமாள்)

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

சோலைக்கவுண்டன்பட்டி

மாவட்டம்

விருதுநகர்

மாநிலம்

தமிழ்நாடு

என்ன இராசி, என்ன நட்சத்திரம் என தெரியாவிட்டாலும் விருதுநகரிலிருந்து 8 கி.மீ., தூரத்தில் உள்ள சோலைக்கவுண்டன்பட்டி சீனிவாசப்பெருமாள் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் அதன் பலன் அவரவர் இராசி, நட்சத்திரத்திற்கு வந்து சேர்ந்து விடும் எனக் கோயில் தல வரலாறு கூறுகிறது. இப்படி அந்தந்த இராசி, நட்சத்திரத்திற்குரிய பலனை பெருமாள் அள்ளிவழங்குவதால் இவரை நம்பெருமாள்என்று இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

மூலவர் திருவேங்கடமுடையான் என்ற சீனிவாசப்பெருமாள். ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

கோயிலின் சிறப்பம்சமே இராசிக்கட்டமும், இராசிக்கு அதிபதியும் இருப்பதுதான். எனவே இராசி நட்சத்திரம் தெரியாமல் இருக்கும் பக்தர்கள் இத்தலம் வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்தால் அவரவர்களுக்குரிய பலன் கிடைக்கிறது.

மூலவரைச் சுற்றிலும் யோகநரசிம்மர், அனுமன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர், வேதாந்ததேசிகன், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் வீற்றிருக்கிறார்கள். கோயிலின் சுற்றுப்பகுதியில் விநாயகர், லட்சுமி, துர்கை, இலட்சுமி நரசிம்மரும் உள்ளனர். நவகிரகம் அனைத்தும் தமது தேவியருடன் உட்கார்ந்த நிலையில் அனுக்கிரக மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார்கள்.

திருவிழா:

புரட்டாசி மாதம் நவராத்திரி ஒன்பது நாளும் பெருமாள் புறப்பாடு உண்டு. சித்திரை வருடப்பிறப்பு, இராமநவமி, கோகுலாஷ்டமி, திருக்கார்த்திகை, மாதம் தோறும் ஏகாதசி, மார்கழி சிறப்பு பூஜை என பெருமாளுக்குரிய அனைத்து விசேஷ பூஜைகளும் இங்குண்டு.

கோரிக்கைகள்:

திருமண தடை உள்ளவர்கள், வேலை வாய்ப்பு வேண்டுபவர்கள், பதவியில் உயர்வு பெற விரும்புபவர்கள், வழக்குகளில் வெற்றி பெற இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பலன் நிச்சயம்.

அத்துடன் எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் இங்கு வந்து பிரார்த்தனை செய்வதால் உடனடி பலன் கிடைக்கிறது என பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *