சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நெய்க்குப்பை

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நெய்க்குப்பை, தஞ்சாவூர் மாவட்டம் .

காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுந்தரேஸ்வரர்
அம்மன் சவுந்தரநாயகி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நெய்க்கூபம்
ஊர் நெய்க்குப்பை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

பசுபதிநாதரான சிவபெருமான், உமையவளின் மூலமாக, பூமிக்கு வேத சக்திகளை அனுப்ப நினைத்தார். நான்கு வேதங்களின் கருத்துக்களையும் பந்து போன்ற கோள்களாக (கிரகங்கள்) மாற்றினார். அந்தக் கோள்களைப் பந்தாடி, மேலும் கீழுமாக அசைத்து வேத சக்திகளை பரவெளிக்கு அம்பிகை செலுத்தினாள். வேதக்கோள்கள் பெரும் ஒளிமிக்கவையாகத் திகழ்ந்தன. இதன் ஒளியைக் கண்டு, பேரொளி மிக்க சூரியனே அதிசயித்து விட்டான். ஏனெனில், அந்த ஒளியின் முன்பு சூரியனின் ஒளி கடுகைப் போல் சுருங்கிவிட்டது. இந்த மலைப்பிலும், அம்பிகையே அந்த கோள்களை பந்தாடி விளையாடுவதற்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நோக்கத்திலும், தான் மறையும் நேரத்தை, சூரியன் தள்ளி வைத்தான். இதனால், சகல லோகங்களிலும் சாயங்கால பூஜைகள் தம்பித்துவிட்டன. சூரிய அஸ்தமன நேரம் மாறியது கண்டு கோபமடைந்தது போல் நடித்த சிவபெருமான், அம்பிகையின் முன் நேரில் வந்தார். அம்பிகை அந்த கோபம் கண்டு ஒதுங்கி நின்றாள். அப்போது நான்கு வேதக்கோள்களும் அப்படியே வானில் அந்தரத்தில் நின்றுவிட்டன.

அம்பிகையை அழைத்த சிவன், “உன் விளையாட்டால் சூரிய அஸ்தமனம் தள்ளிப் போனது. உலக இயக்கம் தம்பித்தது. எனவே, நீ பூலோகம் செல்ல வேண்டும். பசு வடிவில் தங்கவேண்டும். நீ வேதப்பந்துகளை உதைத்ததால், உன் கால்கள் வேதசக்தி பெற்றுள்ளன. பசுவாக மாறும் நீ பூலோகமெங்கும் சென்று அந்த வேதசக்தியைப் பரப்ப வேண்டும்என உத்தரவிட்டார்.

பூமியெங்கும் நடந்தே போய், எப்படி வேதசக்தியை பரப்ப முடியும்? இது சாத்தியமற்ற செயலாயிற்றேஎன ஐயம் கொண்ட அன்னை, தன் சகோதரன் திருமாலைத் துணைக்கழைத்தாள். அவர் வேதத்தை வராக வடிவில் தன் மூக்கில் தாங்கியவர். நந்தகோபாலன் என்ற பெயரில் அம்பிகையுடன் பூமிக்கு வந்தார். அம்பிகை பாதம்பட்ட இடமெல்லாம் வேதசக்தி பரவியது. அம்பிகை பூமிக்கு வந்த போது, முதன் முதலில் கால்பதித்த இடமே இன்றைய நெய்க்குப்பை கிராமம்.

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது, பூமியில் பல இடங்களில் அக்னிக் கோளங்கள் உருவாயின. அம்பிகை நெய்குப்பையில் கால் பதித்தபோது, அவளது ஸ்பரிசத்தால் பூமி குளிர்ந்தது. நல்ல மழையும் பெய்தது. தன்னால் ஏற்பட்ட வெப்பத்தால் பூமியில் வெப்பம் பெருகியதும், அதனால் உயிரினங்கள் பட்ட அல்லல் கண்டும் வருந்திய நரசிம்மர், இத்தலத்தில் வரதராஜனாகக் கோயில் கொண்டார். பெருமாளைப் பிரிந்த திருமகள், பூலோகத்தில் கருப்பத்தூர் என்ற இடத்திற்கு வந்தாள். அது காடாக இருந்த காலம். (திருச்சி அருகிலுள்ள பகுதி). அங்கிருந்த சிவனைத் தியானித்து தவமிருந்த திருமகள், அவரருளால், தன் தலைவன் கொலுவிருந்த திருமங்கைச்சேரிக்கு வந்தாள். கணவரை வரதராஜனாகவும், நரசிம்மனாகவும் ஒரு சேரத் தரிசித்த பாக்கியம் பெற்றாள்.

நெய்க்குப்பை என்ற பெயர் வித்தியாசமாகத் தோன்றுகிறது. அம்பிகை பசுவாக வந்ததும், இங்குள்ள ஒரு கிணற்றில் பாலைப் பொழிந்தாள். கிணறை,”கூபம்என்பர். அந்த கூபத்திலிருந்த பால் நெய்யாக மாறியது. “நெய்க்கூபம்என்ற பெயரே நாளடைவில் திரிந்து நெய் கூபைஆகி, இன்று நெய்குப்பையில் வந்து நிற்கிறது.

சூரியனும் தன் கடமையை மறந்த காரணத்தால் சாப விமோசனம் அடைய விரும்பி, இத்தலத்து இறைவன் மீது ஆவணி 19, 20,21 தேதிகளில் இங்கு வந்து சுந்தரேஸ்வரரை தரிசிக்கிறார். அவரது ஒளி இலிங்கத்தில் படுகிறது.

நெய்க்குப்பையின் அருகிலுள்ள திருமங்கைச்சேரி வரதராஜப் பெருமாள் கோயிலின் வரலாறும் பக்தர்களை பரவசமடையச் செய்யும்.

பாம்புப்புற்றுடன் கூடிய புன்னாக வரதன் சன்னதி இங்குள்ளது. திருமங்கைச்சேரி, மிகச் சிறந்த நாகதோஷ தலமாகவும் விளங்குகிறது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் சமண சமயத்தை தழுவினார். அவரது மனைவி மங்கையர்க்கரசியார் மீண்டும் அவரை சைவராக்கினார். இதனால், ஏற்பட்ட மனமகிழ்ச்சியில், தான் பிறந்த சோழநாட்டில், மதுரை சுந்தரேஸ்வரருக்கு கோயில் அமைத்தாள்.

திருமங்கைச்சேரி வரதராஜப் பெருமாள் கோயில், சொக்கநாத சுவாமி கோயில் இத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது. வரதராஜர், நரசிம்மர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை.

வேண்டுகோள்:

திருமணத்தடைநீங்க, குழந்தைச்செல்வம்பெற, கல்வியில்சிறந்துவிளங்க, இறைவனைவேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *