அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில், பிரப் ரோடு

அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில், பிரப் ரோடு – 638001, ஈரோடு மாவட்டம்.
************************************************************************************************

+91-424-2258670 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பெரிய மாரியம்மன்
தல விருட்சம் வேப்பமரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் பிரப் ரோடு
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

இக்கோயில் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு ஆட்சி செய்த கொங்கு சோழர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது.

கோயிலின் முற்பகுதியில் சிங்க வாகனமும், தூரியும் அழகுற விளங்குகிறது. வேப்பமரத்தை தல விருட்சமாக கொண்டது இக்கோயில். இங்கு பரசுராமர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் தினமும் 3 கால பூசை நடக்கிறது.

பூச்சாட்டுதல் தொடங்கி கம்பத்தை எடுத்து வாய்க்காலில் விடுவது வரை பெரிய மாரியம்மன் கோயில், சின்னமாரியம்மன் கோயில், வாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் விழா இணைந்தே நடந்து வருகிறது.

பெரிய மாரியம்மன் திருவிழா என்பது ஈரோடு நகரத்தின் மிகப் பெரிய திருவிழாவாகும். சாதி, மதம், இன வேறுபாடின்றி ஈரோட்டில் வாழ்கிற அனைத்து மக்களும் பங்கு கொள்கின்ற விழாவாகும்.

மக்கள் குழுக்களாக கூடி இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், பட்டிமன்றங்கள், கவியரங்கம், கருத்தரங்கம், பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

பொங்கல் துவங்கி மஞ்சள் நீராட்டு விழா வரை இளைஞர்களும், பெரியவர்களும், மகளிரும் மாறுவேடமணிந்து கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும்.

ஆயிரக்கணக்கான பெண்கள் மூன்று கோயில்களிலும் உள்ள கம்பங்களுக்கு மஞ்சள் நீர் வார்த்து பயபக்தியுடன் வழிபாடு செய்து கம்பங்களை எடுத்து வாய்க்காலில் விடுவர்.

மக்கள் ஒருவர்மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வது வடநாட்டு ஹோலி பண்டிகையை நினைவூட்டும்.

இக்கோயிலின் தேரில் சிவபெருமான், முருகன் திருவிளையாடல்களை காணலாம். தேரின் நான்கு முனைகளிலும் அழகிய நான்கு யானைகள் தாங்குவதை போல் சிற்பங்கள் இருக்கிறது. இந்நகரில் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், கொங்கலம்மன் கோயில், கருங்கல்பாளையம். சின்னமாரியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன் என ஏராளமான மாரியம்மன் கோயில்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் தலைவியாக பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள்.

இக்கோயிலின் முக்கிய திருவிழா பங்குனி தேர்த்திருவிழாவாகும். ஒவ்வொரு பங்குனி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை விழா ஆரம்பித்து அன்று இரவு பூச்சாட்டுதல் நடைபெறும். பின் அதை தொடர்ந்து கம்பம் நடுதல், மாவிளக்கு, கரகம் எடுத்தல், பொங்கல், தேரோட்டம் இறுதியாக கம்பத்தை எடுத்து காரை வாய்க்காலில் விடுதல் முதலிய நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகிறது.

வெப்பு சம்பந்தமான அம்மை, கொப்புளம் போன்ற நோய்கள் வராமல் பெரிய மாரியம்மன் காத்து அருள்கிறாள்.

பிள்ளையில்லாக் குறைதீர, அம்மனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

அம்பாளுக்கு அபிசேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *