அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில், கருங்கல்பாளையம்

அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில், கருங்கல்பாளையம் – 638001, ஈரோடு மாவட்டம்.
**********************************************************************************************************
+91-424 – 2430114 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – சின்ன மாரியம்மன்

தல விருட்சம்: – வேப்பமரம், அரசமரம்

பழமை: – 200 வருடங்களுக்கு முன் ஊர்: – கருங்கல்பாளையம்

மாவட்டம்: – ஈரோடு

மாநிலம்: – தமிழ்நாடு

வீட்டில் குழந்தைகள் கடவுள் பொம்மைகளை வைத்து அலங்காரம் செய்து வழிபடுவார்கள். அதுபோல, ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரி நதிக்கரையில் ஒரு கூழாங்கல்லை வைத்து விளையாட்டாக சிறுவர், சிறுமிகள் விளையாடிய இடம் ஒரு கோயிலாக மாறி விட்டது. இதையே நாளடைவில் அம்மனாக வழிபட்டனர். பின்னர் சிறிய கோயில் கட்டி அம்பாள் சிலை பிரதிட்டை செய்யப்பட்டது. சிறுவர்கள் கட்டிய கோயில் என்பதால், சின்ன மாரியம்மன் கோயில் எனப் பெயர் பெற்றது. இந்த கோயில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இருக்கிறது.

இந்த கோயிலின் வாசலில் வேப்பமரமும், அரச மரமும் இருப்பது சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் பூச்சாட்டுதல் நடக்கிறது. அதே போல் பூவோடு எடுத்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

கார்த்திகை மாதத்தில் தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்ட விழவின் ஒரு அங்கமாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.

குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற பள்ளிபாளையம், சங்ககிரி, குமாரபாளையம், திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரண்டு வருவர்.

திருமுகன்பூண்டியில் இருந்து அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு கடந்த 1989ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டு கோபுரம் கட்டப்பட்டது. பின்னர் அதே ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

நீண்ட நாட்களாய் குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள அம்மனை வழிபட்டால் அவர்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பேறு உண்டாகும்.

இக்கோயிலின் முன்புறமுள்ள வேப்ப மரம், அரச மரம் ஆகியவற்றில் தொட்டிலை கட்டி தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலில் கொடுக்கப்படும் விபூதிக்கு தனி சிறப்புண்டு என்கின்றனர் பக்தர்கள். தலைவலி, வயிற்றுவலி வரும்போது சிறிது விபூதியை வாயில் போட்டு கொண்டு கொஞ்சம் விபூதியை நெற்றி நிறைய பூசிக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் உடனடியாக வலி தீருமாம்.

சிறிது விபூதியை வாயில் போட்டு கொண்டால் பல வியாதிகளை குணமடைய செய்கிறார் அம்மன் என்கிறார்கள் பக்தர்கள்.

நேர்த்திக்கடன்:

அம்மனுக்குத் திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *