கண் பார்வை குறைபாடு நீங்க

கண் பார்வை குறைபாடு நீங்க

முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.

கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும். முருங்கை பூவை பாலில் வேகவைத்து பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும்
குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது.
முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர். இது குணமாக:
முருங்கை விதை – 100 கிராம்
மிளகு – 100 கிராம்

இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம்
சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.

பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், “காட்டிராக்ட்என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும். இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

இத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனிடமும் வேண்டுங்கள். ஆண்டவன் கண் திறப்பான்.

முண்டக கண்ணியம்மன்

மயிலாப்பூர்,சென்னை

சென்னை

மாரியம்மன்

கொழுமம்

கோயம்புத்தூர்

சூலக்கல் மாரியம்மன்

சூலக்கல்

கோயம்புத்தூர்

நித்யசுமங்கலி மாரியம்மன்

ராசிபுரம்

நாமக்கல்

முத்துமாரியம்மன்

தாயமங்கலம்

சிவகங்கை

கவுமாரியம்மன்

வீரபாண்டி

தேனி

ரேணுகாம்பாள்

படவேடு

திருவண்ணாமலை

கோட்டை மாரியம்மன்

சேலம்

சேலம்

கண்ணுடைய நாயகி அம்மன்

நாட்டரசன்கோட்டை

சிவகங்கை

பண்ணாரி மாரியம்மன்

சத்தியமங்கலம், பண்ணாரி

ஈரோடு

மாரியம்மன்

உடுமலைப்பேட்டை

கோயம்புத்தூர்

இருக்கன்குடி மாரியம்மன்

இருக்கன்குடி

விருதுநகர்

செங்கழுநீர் அம்மன்

வீராம்பட்டினம்

புதுச்சேரி

வீரசேகரர் சாக்கோட்டை சிவகங்கை
கண்ணீஸ்வரமுடையார் வீரபாண்டி தேனி
கைலாச நாதர் காருகுடி திருச்சி
வெள்ளீஸ்வரர் மாங்காடு காஞ்சிபுரம்
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி தேவதானம் விருதுநகர்
தூவாய் நாதர் தூவாநாயனார் கோயில் திருவாரூர்
பொன்னம்பலநாதர் (சொர்ணபுரீஸ்வரர்) நல்லாத்தூர் கடலூர்
கண்ணாயிரமுடையார் குறுமாணக்குடி (திருக்கண்ணார் கோவில்) நாகப்பட்டினம்
பசுபதீஸ்வரர் பந்தநல்லூர் தஞ்சாவூர்
திருப்பயற்றுநாதர் திருப்பயத்தங்குடி நாகப்பட்டினம்
கோலவில்லி ராமர் திருவெள்ளியங்குடி தஞ்சாவூர்
இராஜகோபாலசுவாமி மணிமங்கலம் காஞ்சிபுரம்
அரங்கநாதர் மலையடிப்பட்டி புதுக்கோட்டை
வரதராஜப்பெருமாள் பசுபதி கோயில் தஞ்சாவூர்
சுப்ரமணியசுவாமி எண்கண் திருவாரூர்
சாட்சிநாதர் அவளிவணல்லூர் திருவாரூர்
கண்ணாயிரநாதர் திருக்காரவாசல் திருவாரூர்
நடுதறியப்பர் கோயில் கண்ணாப்பூர் திருவாரூர்
திருமாகறலீஸ்வரர் திருமாகறல் காஞ்சிபுரம்
தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் திருப்பனங்காடு திருவண்ணாமலை
ஊன்றீஸ்வரர் பூண்டி திருவள்ளூர்
கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கச்சூர் காஞ்சிபுரம்
புஷ்பரதேஸ்வரர் ஞாயிறு திருவள்ளூர்

கடன் தொல்லைகள் தீர

கடன் தொல்லைகள் தீர

தேவையற்ற பொருட்கள்மீது ஆசை கொள்ளாதே! வரவுக்கு மீறி செலவு செய்யாதே! பின்னர் கடன் வாங்காதே! வாங்கிவிட்டு அல்லல்படாதே!

இந்தக் காலத்தில் கடன் இல்லாத மனிதரே இல்லை எனலாம். கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பிக்கும் இந்த பழக்கம் கடைசியில் ஒரு மனிதரின் ஒட்டு மொத்த நிம்மதியை குலைத்து, சில சமயங்களில் குடும்பத்தைப் பிரித்து, ஏன் ஒரு சிலரின் உயிரையே எடுத்து இருக்கிறது.

தேவையற்ற செலவுகளைச் சுருக்குங்கள். பொருள் சேர்க்க சிறந்த வழி சிக்கனம்தான். நீங்கள் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறுதொகை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும்.

முதலில் நீங்கள் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கவனித்து தவிர்க்க வேண்டியதை தவிருங்கள். பிறகு தானாக செல்வம் பெருகத் தொடங்கும். செல்போன் அழைப்புகளை தேவையான நேரத்தில் மட்டும் பேசுங்கள். கண்டிப்பாக குறிபிட்ட தொகை மிஞ்சும். ஒரு நாளில் பலமுறை காபி குடிப்பவராக இருந்தால் பிளாஸ்க்கில் எடுத்துச் சென்று பயன்படுத்துங்கள். வங்கி சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தை சேமிப்பது நல்ல வழி.

சேமிப்பு பழக்கத்தை கடைபிடிப்பதன் முலம் உங்களின் கடனைத் தீர்க்கும் நோக்கம் எளிமையாக நிறைவேறும். வீட்டுச் செலவுக் கணக்கை எழுதுங்கள். பணத்தைச் சேமிக்க இதைவிட சிறந்த வழியில்லை. பணம் வரும் வழியும், போகும் வழியும் தெரிந்தால்தான் `பணம் எப்படித்தான் காலியாகுதோ’ என்று புலம்பும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.

வீட்டு மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி விடுவதும் பணத்தைச் சேமிக்கும் சிறந்த வழியே. மொத்தமாக வாங்கிய சமையல் பொருட்களையும் தேவைக்கு ஏற்ப பக்குவமாக பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக சமைத்து வீணாக்கக் கூடாது. அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது, உங்கள் பணத்தைக் காலியாக்கி விடும். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது பணத்தைச் சேமிக்கும் சிறந்த சக்தியாகும். இதனால் உடல்நலமும் பாதுகாக்கப்படும். ஏமாறாமல் இருப்பதுவும் சேமிப்பு வழிகளில் ஒன்றாகும். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் சலுகை அறிவிப்புகள் வருவதை பார்க்கலாம். ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம், 50 சதவீதம் தள்ளுபடி என்று கவர்ச்சி அறிவிப்புகள் வருகின்றன. இவையெல்லாம் வியாபார தந்திரம் தான்.

கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் உங்கள் சிந்தனை மழுங்கடிக்கபடுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். ஆழமாக சிந்தித்து பார்த்தால் உண்மை விலை, தள்ளுபடி விலையை விடக் குறைவாக இருக்கும். ஏற்கனவே பயன்படுத்தபட்ட பொருட்களை செகட் ஹேண்டாக வாங்குவது பணத்தை மிச்சம் பிடிக்கும் சிறந்த வழியாகும்.

வாங்கிய ஓராண்டு காலத்திற்குள்ளாக புதிய காரின் விலை முன்றில் ஒரு பங்கு குறைந்து விடுகிறது. தரமும் தாழ்ந்து போவதில்லை. அப்படி இருக்கும்போது இரண்டாம் தரமாக வாங்கி பயன்படுத்துவதில் என்ன பிழையிருக்கிறது? போதிய அளவு சோதனை செய்து பார்த்து வாங்கி பயன்படுத்தினால் நமக்குத்தானே லாபம். எலக்ட்ரானிக் சாதனங்களையும், வீட்டு உபயோக பொருட்களையும் கூட இந்தப்பட்டியலில் சேர்க்கலாம். மேற்படிப்பை தொடர்கிறவர்கள் தங்கள் பொருளாதார நிலையை உத்தேசித்து புதிய புத்தகங்களை விலைக்கு வாங்கிப் படிப்பதை விட, பொதுநுலகத்தைப் பயன்படுத்தினால் செலவு கட்டுப்படும். ஆனால் அத்தியாவசியம் என்னும் புத்தகங்களை மட்டும் விலை கொடுத்து சொந்தமாக வாங்கி விடுவது நல்லது.

வீணாக்காமல் பயன்படுத்துவதும் ஒரு சேமிப்புதான். நாம் வாழ்க்கை முழுவதும் நுகர்வோராகவே இருக்கிறோம். மற்றவைகளை அனுபவிப்பதன் முலமே நமது வாழ்க்கை நகர்கிறது. வாழ்வில் சிலவற்றை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். சிலவற்றைக் குறைவாக பயன்படுத்த வேண்டும். இன்னும் சிலவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த மூன்றையும் சரியாகச் செய்வதுதான் உண்மையான சேமிப்பாகும்.

மின்விளக்கு, விசிறி, .சி. போன்ற சாதனங்களை தேவைக்கேற்ப குறைவாக பயன்படுத்துவதன் முலம் நிறைய சேமிக்கலாம். மற்றவர்களுக்காக பகட்டாக காட்டிக் கொள்ளவும், அலங்காரத்திற்காகவும் கவர்ச்சிக்காகவும் பொருட்களை வாங்காமல் இருந்தால், அதுவும் சேமிப்புதான்.

இப்படியெல்லாம் சேமித்தால் கடனை அடைத்துவிடலாம். அட! போங்கப்பா! இதெல்லாம் நம்மால் ஆகாது! என்பவர்கள் கீழ்கண்ட ஆலயங்களின் இறைவனை மனதால் வேண்டிக்கொள்ளுங்கள்.

அந்த ஆலயங்களுக்குச் செல்லும் செலவாவது மிச்சப்படும்.

உடையீஸ்வரர் இளநகர் காஞ்சிபுரம்
அருளாலீசுவரர் அழிசூர் காஞ்சிபுரம்
வீரஆஞ்சநேயர் சண்முகபுரம் கோயம்புத்தூர்

இலட்சுமி நரசிம்மர்

தாளக்கரை

கோயம்புத்தூர்
சாரபரமேஸ்வரர் திருச்சேறை தஞ்சாவூர்
வீரமார்த்தாண்டேஸ்வரர் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி

இலட்சுமி நரசிம்மர்

கீழப்பாவூர்

திருநெல்வேலி

நரசிங்கப்பெருமாள் மேலமாட வீதி, திருநெல்வேலி திருநெல்வேலி
தியாகராஜர் திருவாரூர் திருவாரூர்
அபிமுக்தீஸ்வரர் மணக்கால் ஐயம்பேட்டை திருவாரூர்
ஸ்ரீநிவாசப் பெருமாள் குடவாசல் திருவாரூர்
குடமாடு கூத்தன் திருநாங்கூர் நாகப்பட்டினம்

சுப்பிரமணிய சுவாமி

பெரம்பூர் நாகப்பட்டினம்
சகஸ்ரலட்சுமீஸ்வரர் தீயத்தூர் புதுக்கோட்டை