Category Archives: சிவ ஆலயங்கள்

சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில், அமானிமல்லாபுரம்

அருள்மிகு சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில், அமானிமல்லாபுரம், தர்மபுரி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுயம்புலிங்கேஸ்வரர்
ஊர் அமானிமல்லாபுரம்
மாவட்டம் தர்மபுரி
மாநிலம் தமிழ்நாடு

1860ம் ஆண்டில் இப்பகுதியில் வசித்த சின்னவேடி செட்டியார் என்பவரின் கனவில் சிவபெருமான் தோன்றி, “இங்குள்ள தோப்பில் இலிங்கம் ஒன்று இருக்கிறது. அதை வைத்து எனக்கு கோயில் கட்டு. இப்பகுதியை சிறப்பாக பாதுகாப்பேன்என உத்தரவிட்டார். பதறி எழுந்த செட்டியார் மறுநாளே கோயில் கட்டுவதற்கான பணிகளைத் துவங்கினார். அவருக்குரிய தென்னந்தோப்பில் இறைவனைத் தேடி அலைந்தார். இலிங்கத்தைக் காணவில்லை. பிறகு ஒரு புளியமரத்தடிக்கு சென்று வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். என்ன செய்யலாம் என யோசனை செய்துகொண்டே ஒரு குச்சியால் எதேச்சையாக மண்ணை கிளறிக் கொண்டிருந்தார். அப்போது குச்சியில் ஏதோ தட்டுப்பட இறைவனை நினைத்துக் கொண்டு மேலும் மேலும் தோண்டிப் பார்த்தார். உள்ளே இலிங்கம் ஒன்று இருந்தது.

சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம்

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம்.

+91- 4333 – 276 412, 276 467, 94427 62219

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுந்தரேஸ்வரர்
அம்மன் பாகம்பிரியாள்
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பைரவர் தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் துர்வாசபுரம்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

ராமர் இலங்கையில் யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பியதும், முனிவர்களும் அவரவர் இருப்பிடம் திரும்பினர். அவர்களில் துர்வாச மகரிஷி, இத்தலம் வழியாக சென்றார். ஓரிடத்தில் சிவலிங்கத்தைக் கண்டு பூஜித்தார்.

பிற்காலத்தில் இந்த லிங்கம் புதைந்து போனது. இடையன் ஒருவன் இவ்வழியாக பால் கொண்டு சென்றபோது, தொடர்ந்து இவ்விடத்திலுள்ள மரத்தின் வேர் தட்டி, தடுக்கி விழுந்து பால் கொட்டியது. அதை வெட்டியபோது அவ்விடத்தில் ரத்தம் பீறிட்டது. பயந்து போன இடையன் அவ்விடத்தைத் தோண்டிய போது, லிங்கம் இருந்ததைக் கண்டான். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.

துர்வாசர் வழிபட்டதால் துர்வாசபுரம்என்று பெயர். இத்தலத்தில் சுவாமி சுந்தரேஸ்வரர்என்றும், அம்பாள் பாகம்பிரியாள் என்றும் அழைக்கப்பட்டனர்.