Category Archives: சிவ ஆலயங்கள்

யக்ஞேயஸ்வரர் திருக்கோயில், கமலாலய தீர்த்தம் – திருவாரூர்

அருள்மிகு யக்ஞேயஸ்வரர் திருக்கோயில், கமலாலய தீர்த்தம் திருவாரூர், திருவாரூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் யக்ஞேயஸ்வரர்
அம்மன் உத்ரவேதி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
தீர்த்தம் கமலாலய தீர்த்தம்
ஊர் கமலாலய தீர்த்தம்திருவாரூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

படைப்புத் தொழில் செய்த பிரம்மா, சிவனைப்போலவே ஐந்து தலைகளுடன் இருந்ததால், தன்னையும் சிவனுக்கு இணையாகக் கருதி ஆணவம் கொண்டார். இந்த ஆணவத்தை அடக்க சிவன், அவரது ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளினார். தவறை உணர்ந்த அவர், மன்னிப்பு வேண்டி ஒரு யாகம் நடத்த விரும்பினார். பூலோகத்தில் இத்தலத்தை தேர்ந்தெடுத்த அவர், சிவனை வேண்டி ருத்ர யாகம்நடத்தினார். மகிழ்ந்த சிவன் அவருக்கு, ரிஷபாரூடராக அம்பிகையுடன் காட்சி தந்தார். பிரம்மா அவரை வணங்கி, படைப்புத்தொழிலை மீண்டும் தொடர அருளும்படி வேண்டினார்.

அவரது வேண்டுதலை ஏற்ற சிவன், பிரம்மனுக்கு மீண்டும் படைக்கும் ஆற்றலை கொடுத்தார். எனவே இத்தலத்து சிவனுக்கு யக்ஞேஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது. இவரை யாகநாதர்என்றும் அழைப்பர்.

சிவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் உத்ரவேதி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டதற்கு காரணம் உண்டு. சிவன், அம்பிகையின் இருப்பிடம் கைலாயம். கைலாயத்தின் திசை வடக்கு. ஆகவே அம்பிகை வடக்கு திசையை இருப்பிடமாகக் கொண்டவள் ஆகிறாள். உத்ரம் என்றால் வடக்குவேதி என்றால் நாயகிஎன்று பொருள் உண்டு. எனவே இவள் உத்ரவேதிஎன அழைக்கப்படுகிறாள். எனவே இங்கு வழிபட்டால் கைலாயத்திற்கே சென்ற புண்ணியமும் கிடைக்கும்.

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புலிவனம்

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புலிவனம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44-2727 2336

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வியாக்ரபுரீஸ்வரர்
அம்மன் அமிர்தகுஜலாம்பாள்
பழமை 1500 வருடங்களுக்கு முன்
ஊர் திருப்புலிவனம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதர் என்பவரும் வசித்தனர். இவர்கள் சிவனுக்கு தினமும் மலர் மாலை அணிவித்து வணங்குவது வழக்கம். ஆனால், பல சமயங்களில் நல்ல மலர்கள் கிடைக்காது. அழுகல் மலர்கள் கலந்து விடும். மரத்தின் உச்சியிலுள்ள நல்ல மலர்களை பறிக்க வியாக்ரபாதருக்கு முடியாத சூழல் இருந்தது. அவர் மன வருத்தத்தில் இருந்தார். பக்தனின் வருத்தம் போக்க சிவன் அவர் முன் தோன்றினார்.

பக்தனே. உன் வருத்தத்தின் காரணத்தைச் சொல்என்றார் தெரியாதவர் போல. வியாக்ரபாதர் சிவனிடம், “தங்களுக்கு பூஜை செய்ய சிறந்த மலர்கள் கிடைப்பதில்லை. அதிகாலையில் நடை திறக்கும் முன் மாலை தொடுத்தாக வேண்டும். இருளில் நல்ல மலர்கள் தெரிவதில்லை. அதற்குரிய வசதியைச் செய்து தர வேண்டும்என்றார். சிவன் அவருக்கு புலிக்கால்களைக் கொடுத்தார். அந்த நகங்களால் மரத்தை இறுகப் பற்றிக் கொண்டு ஏறி சிறந்த மலர்களைப் பறித்து வழிபட்டார் வியாக்ரபாதர். இவர் புலிவடிவில் தரிசித்த தலமே திருப்புலிவனம். சுவாமியும் தன் பக்தனின் பெயரையே தனக்கும் சூட்டிக் கொண்டு வியாக்ரபுரீஸ்வரர்ஆனார்.