Category Archives: சிவ ஆலயங்கள்

கரபுரநாதர் திருக்கோயில், உத்தமசோழபுரம்

அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில், உத்தமசோழபுரம், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கரபுரநாதர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சோழபுரி, கரபுரம்
ஊர் உத்தமசோழபுரம்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

இராவணன் சகோதரன் கரதூசனன், ஆயிரம் ஆண்டு தவம் செய்து, அக்னிபிரவேசம் செய்யும் நேரத்தில் நில்என்ற அசரீரி வாக்கு கேட்டு நின்றான். இறைவன் கரதூசனனுக்கு காட்சி அளித்தார். அப்போது இறைவனுக்கு கரதூசனன் பூஜை செய்ததால், “கரபுரநாதர்என்ற பெயர் வழங்கப்படுகிறது.
திரேதாயுகத்தில் கரபுரம் என்றும், கலியுகத்தில் சோழபுரி என்றும் கூறப்படும்

கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில், வீரபாண்டி

அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில், வீரபாண்டி, தேனி மாவட்டம்.

+91-4546-246 242

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கண்ணீஸ்வரமுடையார்
அம்மன் அறம்வளர்த்த நாயகி
தீர்த்தம் முல்லையாறு
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் வீரபாண்டி
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

பாண்டிய நாட்டை வீரபாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். பார்வையோடு இருந்த அவனுக்கு முன்வினைப் பயனால் பார்வை போனது. அவன் பட்ட மனவருத்தத்துக்கு அளவே இல்லை. கஷ்டம் வரும் போது கடவுளை நினைக்காதவர் உலகில் இல்லை. வீரபாண்டியனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவன் சிவபெருமானை உணர்ச்சிப் பெருக்குடன் வணங்கினான். அவரது அறிவுரைப்படி முல்லையாற்றங்கரையிலுள்ள கவுமாரியை வணங்கச் சென்றான். கருணைத்தாயான அவள், அவனுக்கு ஒரு கண் பார்வையைக் கொடுத்தாள். மறுகண் ஒளி பெற, தான் வணங்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அறிவுறுத்தினாள். வீரபாண்டியனும் அவ்வாறே செய்தான். சிவன் அவனிடம் தனக்கொரு கோயிலை எழுப்பும்படி கூறினார். அவ்வாறு எழுந்ததே கண்ணீஸ்வரமுடையார் கோயில். பின்னர் வீரபாண்டியனின் மற்றொரு கண்ணும் ஒளி பெற்றது.