Category Archives: சிவ ஆலயங்கள்

கனககிரீசுவரர் திருக்கோயில், தேவிகாபுரம்

அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில், தேவிகாபுரம், திருவண்ணாமலை மாவட்டம்.

+91- 4173-247 482, 247 796.

மலைமீதுள்ள கோயில் காலை 8 முதல் 10 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். கீழே உள்ள அம்மன் கோயில் காலை 6 முதல் 12மணி, மாலை 5 முதல் 8 மணிவரை திறந்திருக்கும்.

மூலவர் கனககிரீசுவரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சிவதீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தேவக்காபுரம்
ஊர் தேவிகாபுரம்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

ஒரு சமயம் அம்மையும் அப்பனும் கயிலையில் வீற்றிருக்கும்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் சக்தியை நீக்கி சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். அதுகண்டு வருத்தமடைந்த அன்னை, இறைவனை நோக்கி வணங்கி,”அய்யனே. தங்களுடலில் சரி பாதியை எனக்கு வழங்கியருள வேண்டும்என்று வேண்டினாள்.

இறைவனும் சக்தியை நோக்கி, “உமையே! நீ பூவுலகம் சென்று கச்சியம்பதியில்(காஞ்சிபுரம்) காமாட்சி என்ற பெயருடன் தவமிருந்து என்னை பூஜித்து வா. உரிய காலத்தில் உன்னை மணந்து கொள்வேன். பின்னர் திருவருணைக்கு (திருவண்ணாமலை) வந்து வழிபாடு செய்யும்போது உமக்கு இடப்பாகம் தருவேன்என்று உறுதியளித்தார். அவ்வண்ணமே அன்னை கச்சியம்பதி வந்து தவமிருந்தார். பின்னர் திருவருணைக்கு செல்லும்போது வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டலம் தங்கி இங்குள்ள கனககிரி நாதரை வணங்கித் தவமிருந்தார். அதனால் இத்தலம் தேவிகாபுரம் என்று பெயர் பெற்றது என்பர். பின்னர் திருவருணைக்கு சென்று ஏகாம்பரநாதரை மணந்து இடப்பாகம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

கம்பகரேசுவரர் கோயில், திருப்புவனம், தஞ்சாவூர்

அருள்மிகு கம்பகரேசுவரர் கோயில், திருப்புவனம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435- 2460760.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கம்பகரேசுவரர், நடுக்கம் தீர்த்த நாயகன்
அம்மன் தர்மசம்பர்த்தினி, அறம் வளர்த்த நாயகி
தல விருட்சம் வில்வமரம்
தீர்த்தம் சரபதீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புவனேசுரம்
ஊர் திருப்புவனம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

வரகுணபாண்டியன் என்ற மன்னன் போருக்குச் செல்கிறான். அவனின் குதிரை வேகமாகச் செல்கிறது. பாதையின் குறுக்காக அந்தணர் வர, குதிரையின் வேகத்தை அடக்குவதற்குள் குதிரை காலில் விழுந்து விதிப்பயனால் அந்த அந்தணர் உயிர் விடுகிறார். பிறகு அந்த அந்தணரின் ஆவியானது வரகுணபாண்டியனை பிடிக்கிறது.

அதாவது பிரம்மகத்தி தோசம் பிடிக்கிறது. அது நீங்க, திருவிடைமருதூர் செல்கிறார். அங்கு சென்று வழிபட அந்த பிரம்மகத்தி தோசமானது கிழக்கு வாயிலில் ஒதுங்குகிறது. அதிலிருந்து விடுபட்ட வரகுணபாண்டியன் தனது தோசம் நீங்கியவுடன் திருபுவனம் வருகிறார். அப்போது மீண்டும் அந்த ஆவி வந்து பிடிக்குமோ என்று பயப்படுகிறார். அந்த பயத்தினால் நடுக்கம் ஏற்படுகிறது. அந்த நடுக்கத்தை கம்பகரேசுவரர் போக்குகிறார்.