Category Archives: சிவ ஆலயங்கள்

பஞ்சவர்ணேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்), நல்லூர்

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்), நல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்

காலை 7.30 முதல் 12 மணிவரையிலும் மாலை 5.30 முதல் 8 மணிவரையிலும் இத்தல இறைவனை தரிசிக்கலாம்.

இமயமலையில் உமாதேவியை சிவபெருமான் திருமணம் செய்யும் காட்சியைக் காண உலகத்திலுள்ள அனைத்து சீவராசிகளும் திரண்டு வடக்கே சென்றனர். இதனால் வடதிசை பாரத்தால் தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது. உலகைச் சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு செல்லும்படி சிவபெருமான் பணித்தார். தனக்கு திருமண காட்சி காணும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்ற அகத்தியரிடம், ”நான் உனக்கு திருமணகாட்சி அருளுகிறேன்என்றார் சிவன். இதன்படி அந்த காட்சியை இந்த தலத்தில் காட்டி அருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு இலிங்கத்தை வைத்துப் பூஜித்து பேறுபெற்றார். அன்று அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலலிங்கத்தின் பின்புறம் கருவறையில் காணலாம்.

மாசி மகத்திற்காக கும்பகோண மகாகுளத்தில் நீராடுவதால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நல்லூரில் உள்ள குளத்தில் நீராடினாலும் கிடைக்கும் என்கிறது புராணம். பாண்டவர்களின் தாய் குந்தி தேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் தொற்றிக் கொள்கிறது. இந்த தோஷம் நீங்க குந்தி, நாரதரிடம் யோசனை கேட்க, ஏழு கடல்களில் சென்று நீராடினால் தோஷம் நீங்கும் என்கிறார். நான் பெண், என்னால் எப்படி ஏழுகடல்களில் சென்று நீராட முடியும், எனவே வேறு ஏதாவது வழி கூற வேண்டும் என்கிறாள் குந்தி.

கைலாசநாத சுவாமி திருக்கோயில், பிரம்மதேசம்

அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில், பிரம்மதேசம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 254247

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ராஜராஜசதுர்வேதி மங்கலம்
ஊர் பிரம்மதேசம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மகத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த பிரம்மனின் பேரனான உரோமசமுனிவர் தனது தோஷம் நீங்க, பல இடங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு வந்தார். இலந்தைமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்தார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக இருந்ததைக் கண்டார். பின், அவ்விடத்தில் தீர்த்தம் ஒன்றினை உருவாக்கி, சுவாமியை அங்கேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து மனமுருகி வணங்கிய அவர், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றார். அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன், இத்தலத்தில் கைலாசநாதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நவகைலாயங்களில் ஆதிகைலாயம்எனப்படும் இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால் காசி, ராமேஸ்வரம் சென்று சிவனை வணங்கிய பலன் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர்.