Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு திருவனந்தீஸ்வரர் திருக்கோயில், காட்டுமன்னார் கோயில்

அருள்மிகு திருவனந்தீஸ்வரர் திருக்கோயில், காட்டுமன்னார் கோயில், கடலூர் மாவட்டம்.

+91 94864 57124 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருவனந்தீஸ்வரர்

தாயார்

சவுந்தரநாயகி

தல விருட்சம்

தீர்த்தம்

சூரிய சந்திர புஷ்கரணி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

திருவனந்தீஸ்வரம்

ஊர்

காட்டுமன்னார் கோயில்

மாவட்டம்

கடலூர்

மாநிலம்

தமிழ்நாடு

அட்டநாகங்களில் (எட்டு நாகம்) ஒன்றான அனந்தன் தனது குறை நீங்க, இத்தல இறைவனை வழிபட இங்கு வந்தது. எனவே இவ்வூருக்கு திருவனந்தீஸ்வரம் என்ற புராணப் பெயர் இருந்தது. தற்போது காட்டுமன்னார்கோயில் எனப்படுகிறது. ஒருகாலத்தில் இங்கு வில்வ மரங்கள் அதிகமாக இருந்தன. கங்கை கொண்ட முதலாம் ராஜேந்திரசோழன், அனந்தீஸ்வரரைத் தனது குலதெய்வமாக வணங்கியுள்ளான். கோயில் கர்ப்பகிரகத்தை சுற்றிலும் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆதித்த கரிகாலன் கொலையுண்ட வரலாறு உள்ளிட்ட தகவல்கள் இதில் உள்ளன.

அனந்தன் பூஜை செய்ததற்கு ஆதாரமாக இங்குள்ள சோமஸ்கந்தரின் கையில் நாகம் இருக்கிறது. காலசர்ப்ப தோஷம் நீங்க அனந்தீஸ்வரருக்கும், அம்பாள் சவுந்தரநாயகிக்கும் அபிஷேகம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இது இயலாதவர்கள் வெள்ளியிலோ பிற உலோகங்களாலே ஆன நாக வடிவிலான உருவங்களை காணிக்கை செலுத்தலாம். சிவன் சன்னதி அருகில் சனிபகவானுக்கும் சன்னதி உள்ளதால், அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவற்றின் பிடியில் உள்ளோரும் அனந்தீஸ்வரரை வணங்கி வரலாம்.

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், பெரியசேக்காடு

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், சித்திவிநாயகர், கருமாரியம்மன் கோயில், பெரியசேக்காடு, மணலி சென்னை.

காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அருணாச்சலேஸ்வரர்
அம்மன் உண்ணாமுலை
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பெரியசேக்காடு
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சித்தி விநாயகரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கோயில். மகனை தனியே விட மனதில்லாமல் சில வருடங்களுக்கு பிறகு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் என்ற திருப்பெயர்களில் மகனது அருகிலேயே தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கின்றனர் அம்மையும், அப்பனும்.

இங்குள்ள கருமாரி அம்மன் தனி சன்னதியில் நாகக்குடையின் கீழ் காட்சி தருகிறார். இவளது திருபாதங்களுக்கு கீழ் ரேணுகா பரமேஸ்வரியின் சிரசு உருவம் அமைந்துள்ளது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளும், ஆடி மாதமும் கருமாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஆடிப்பூரத்தன்று பெண்கள் ஒன்று சேர்ந்து கருமாரியம்மன் மடியில் பச்சைப்பயிறு கட்டி, வளையல் அணிவித்து ஐந்து வகை சாதங்களை படைத்து வளைகாப்பு நடத்துகின்றனர். சித்ரா பவுர்ணமியன்று 501 பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் செய்தும், 108 தீச்சட்டி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். மூலவர் சித்திவிநாயகருக்கு இடப்புறம் அருணாசலேஸ்வரர் சன்னதி உள்ளது.