Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் உடனுறை பட்டுவதனாம்பிகை திருக்கோயில், பெருநகர்

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் உடனுறை பட்டுவதனாம்பிகை திருக்கோயில், பெருநகர் (அஞ்சல்), மானாம்பதி (வழி), உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 9655793042, 9444341202 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரம்மீசர்

உற்சவர்

சோமாஸ்கந்தர்

தாயார்

பட்டுவதனாம்பிகை

தல விருட்சம்

வன்னிமரம்

தீர்த்தம்

பிரம்ம தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

பிரம்மநகர், சதுரானனம் சங்காரானனம், பிரம்மபுரம்

ஊர்

பெருநகர்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1073ல் எடுப்பித்து விளக்கு வைத்து சென்றுள்ளான். இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டாம் இராசராசனுடைய கல்வெட்டு தொன்மையானது, இங்குள்ள ஜேஷ்டா தேவியின் சிலை பல்லவர் காலத்தது. சம்புவரையனான ஆளப்பிறந்தான் வைகாசியில் விழா கொண்டாட, கைக்கோளரிடம் வரிவசூலித்தார். பங்குனியில் விழா எடுக்கவும் ஏற்பாடு செய்த செய்தி, அழகிய பல்லவன் கோன்நந்தி பன்மன் (கோப் பெருஞ்சிங்கன்) நன்மைக்காக, இக்கோயிலை கற்கோயிலாகக் கட்டித் திருமணமண்டபமும், இவ்வூரில் வாழ்ந்த வில்லி திருவன் திருகாந்தரான் எழுப்பினார் கி.பி.1626ல் கிராம மக்கள் 5 காணி நிலப்பரப்பில் பூந்தோட்டமும் இலுப்பைத் தோப்பும் வைக்க ஏற்பாடு செய்தனர். 1760ல் பிரமீசம் பதிற்றுப் பத்தந்தாதி எழுதிய கச்சியப்பர், ஊரின் செழிப்பை பின் வருமாறு புகழ்ந்துள்ளார்.

அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில், அழிசூர்

அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில், அழிசூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அருளாலீசுவரர்

தாயார்

அம்புஜ குசலாம்பாள்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அழிசூர்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த அழகிய கிராமம் அழிசூர். அழிஞ்சல் மரத்தடியில் இலிங்கம் அமைத்து அகத்தியர் வழிபட்டதால் அழிசூர் என அழைக்கப்படுகிறது. கி.பி. 1123-ம் ஆண்டு விக்கிரமச் சோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது. சுங்கந் தவிர்த்த சோழர் சதுர்வேதி மங்கலம் என்பது அழிசூர் கிராமத்தின் முந்தைய பெயராகும். செய்யாறு நதியின் தென்கரையில், சோழர் காலத்தில் கட்டப்பட்டது இந்த ஆலயம்.

இக்கோயில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், நுழைவுவாயில் தெற்கு நோக்கி உள்ளது. கல்தூண் ஒன்று துவஜஸ்தம்பமாக நடப்பட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. இங்குள்ள நந்திதேவரை வில்வம், அருகம்புல், வெல்லம், ஏலக்காய் கலந்த பச்சரிசி கொண்டு வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.