Category Archives: சிவ ஆலயங்கள்

கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை (உசிலம்பட்டி), மதுரை மாவட்டம்.

+91- 4552 – 243 235, 243 597, 94425 – 24323

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் அதிகாலையிலேயும் நடை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
உற்சவர் நடராஜர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் நெய்கொட்டா மரம்
தீர்த்தம் பொற்றாமரைக்குளம்
ஆகமம் 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திடியன் மலை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

இராவணனின் கொடூர ஆட்சிக்கு முடிவு கட்டிய இராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு அசுவமேத யாகம் செய்தார். யாகத்தின் போது, அவரது பட்டத்துக் குதிரை செல்லும் வழியில் எங்‌கெல்லாம் ஒய்வு எடுக்கிறதோ அங்கெல்லாம் ஒர் காசிலிங்கம் வைத்து பிரதிஷ்டை ‌செய்யப்பட்டு வணங்கப்பட்டது. அவ்வாறு ஒர் நாள் அவரது பட்டத்துக் குதிரை தற்போது ‌கோயில் அமைந்திருக்கும் பகுதி்க்கு அருகே உள்ள மலையின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள ஒர் பொற்றாமரைக் குளத்தின் கரையில் அமர்ந்து ‌ஓய்வெடுத்தது. ஆகவே அவ்விடத்தில் காசிலிங்கம் வைத்து பிரதிஷ்ட‌ை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் காசிலிங்கம் பிரதி்ஷ்டை செய்யப்பட்ட இடத்தில் தினியே கோயிலைக்கட்டி வழிபாடு நடத்தியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-4362-262 499, 9344589244, 9443586453

காலை 6 மணிமுதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
தல விருட்சம் வில்வமரம்
தீர்த்தம் சந்திரபுஷ்கரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திங்களூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர். இவரை உலகமே அறியும். ஆனால், மூத்த திருநாவுக்கரசர், இளைய திருநாவுக்கரசர் ஆகியோரைத் தரிசிக்க திங்களூர் கைலாசநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும்.

அப்பூதியடிகள் என்ற சிவபக்தர் திங்களூரில் வசித்தார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். நீங்கள் ஒரு முருக பக்தராக இருந்து. உங்களுக்கு குழந்தை பிறந்தால் முருகன், கந்தன், கார்த்திகேயன்என ஏதோ ஒரு பெயர் வைப்பீர்கள். ஆனால், அப்பூதியடிகள் சிவபக்தராயினும் கூட, சிவனின் அடியவரான திருநாவுக்கரசரின் பெயரை தன் குழந்தைகளுக்கு வைத்தார். மூத்தவனுக்கு மூத்த திருநாவுக்கரசு,” இளையவனுக்கு இளைய திருநாவுக்கரசுஎன்று. தன்னை விட, தன் அடியார்களுக்கு தொண்டு செய்வதையே தெய்வம் விரும்பும். “மக்கள் சேவையே மகேசன் சேவைஎன்பதும் இறைவனுக்கு பிடித்த பொன்மொழி. அதைப் பின்பற்றி நாவுக்கரசரின் பெயரால் கல்விக்கூடம். அன்னசத்திரம், தண்ணீர் பந்தல் ஆகியவை அமைத்தார். மக்கள் சேவையை வலியுறுத்தும் இந்த குடும்பத்தினர் சிலை வடிவில் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் உள்ளனர். வேறு எந்தக் கோயிலிலும் மூத்த, இளைய திருநாவுக்கரசர்களைக் காண முடியாது. இதில் மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது. திருநாவுக்கரசர் அக்குழந்தையைக் காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.