Category Archives: சிவ ஆலயங்கள்

குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில், கோயம்பேடு

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில், கோயம்பேடு, சென்னை.

+91-44 – 2479 6237

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர்
அம்மன் தர்மசம்வர்த்தினி
தீர்த்தம் குசலவ தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோயம்பேடு
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

அயோத்தியில் இராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க இராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய அவள், இலவன், குசன் என்னும் 2 மகன்களை பெற்றெடுத்தாள். இராமர் தனது தந்தை என தெரியாமலேயே, இலவகுசர் வளர்ந்தனர். இந்நேரத்தில் இராமபிரான், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற இலவகுசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவை காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்தும் இராமபிரான் மீது கோபமடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர்.

குபேரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-96778 18114

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் குபேரபுரீஸ்வரர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தஞ்சவூர்
ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

குபேரன் தஞ்சாவூருக்கு வந்து சிவனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) கட்டப்படுவதற்கு முன்னதாக ஊர் எல்லையில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இங்குள்ள இறைவன் தஞ்சபுரீஸ்வரர்எனப்பட்டார்.

இராவணன், தான் பெற்ற தவவலிமையால், குபேரனிடமிருந்த செல்வத்தைப் பறித்துக் கொண்டான். செல்வமிழந்த குபேரன், மீண்டும் செல்வம் பெற, பல சிவன் கோயில்களுக்கும் சென்றான். இறுதியில் தஞ்சாவூர் தலத்துக்கு வந்து இங்குள்ள சிவனிடம் தஞ்சமடைந்தான். தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமையுள்ள சிவன் இக்கோயிலில் தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரது பெயராலேயே இவ்வூருக்கு தஞ்சவூர்என்ற பெயர் எற்பட்டு காலப்போக்கில் தஞ்சாவூர்ஆனதாகத் தல புராணம் குறிப்பிடுகிறது. “குபேரபுரீஸ்வரர்என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.