Category Archives: சிவ ஆலயங்கள்

புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், ஆரணி-புதுக்காமூர்

அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், ஆரணி(புதுக்காமூர்), திருவண்ணாமலை மாவட்டம்.

+91 97891 56179, 96294 73883

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் புத்திரகாமேட்டீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் பெரிய நாயகி
தல விருட்சம் பவளமல்லி
தீர்த்தம் கமண்டல நதி
ஆகமம் சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தர்மாரண்யஷேத்ரம்
ஊர் ஆரணி
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லை. தனக்கு பின் நாட்டை ஆள இளவரசர் இல்லாததால் தசரதர் மிகவும் வருந்தினர். குழந்தைப்பேறு உண்டாவதற்கு வழி சொல்லும்படி, தன் குலகுரு வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டார். அவர், இத்தலத்தைச் சுட்டிக்காட்டி சிவனை வழிபட அந்த பாக்கியம் கிடைக்குமென்றார். அதன்படி தசரதர், இவ்விடத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, ரிஷ்யசிருங்க மகரிஷியின் தலைமையில் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார். இதன்பின், அவர் இராமர், இலட்சுமணன், பரதன், சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பிய தசரதர், அவருக்கு யாகத்தின் பெயரால் புத்திரகாமேட்டீஸ்வரர்என்றே பெயர் சூட்டினார்.

புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு

அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு, சோழாவரம் வழி, திருவள்ளூர் மாவட்டம்.

+91- 44 – 2902 1016, 99620 34729

காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 – 1 மணி வரையில் நடை திறந்திருக்கும்.

மூலவர் புஷ்பரதேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சொர்ணாம்பிகை
தல விருட்சம் நாகலிங்கமரம்
தீர்த்தம் சூரிய புஷ்கரணி
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் ஞாயிறு
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

தேவலோக சிற்பியான விசுவகர்மாவின் மகள் சமுக்ஞாவை சூரியன் மணந்து கொண்டார். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சமுக்ஞா, தன் நிழலை உருவமாக்கி கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். எமன் மூலமாக இதையறிந்த சூரியன், மனைவியை அழைத்து வரச் சென்றார். கிளம்பும்போது சிவபூஜை செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றி நகர்ந்தது. சூரியன் அதை பின்தொடர்ந்தான். அந்த ஜோதி, இங்கு தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதிலிருந்து தோன்றிய சிவன், சூரியனுக்கு காட்சி கொடுத்து, மனைவியுடன் சேர்ந்து வாழும்படியாக அருளினார். பின்பு சூரியனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.