Category Archives: சிவ ஆலயங்கள்

செண்பகவல்லி உடனுறை பூவனாதர் திருக்‌கோயில், கோவில்பட்டி

அருள்மிகு செண்பகவல்லி உடனுறை பூவனாதர் திருக்‌கோயில், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.

+91 4632 2520248

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூவனாதர்
அம்மன் செண்பகவல்லி
தல விருட்சம் களா மரம்
தீர்த்தம் அத்தியர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கோவிற்புரி (மங்கைநகர்)
ஊர் கோவில்பட்டி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில், உலகைச் சமன்செய்யும் பொருட்டு, இறைவன் ஆணைப்படி, அகத்தியர் பொதிகை நோக்கிப் வந்தார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் ஆகிய‌ேரை வதைத்தனால் உண்டான பிரம்மகத்தி தோசம் நீங்கப்பெற்றார்.

பொன்ம‌லை முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அகத்தியர் தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு, தன் பயணத்தைத் ‌தொடர்ந்தார். வெள்ளிமலை வாமனன், நந்திதேவரின் சாபத்தால்  வெம்பக்‌கோட்டை ‌வேந்தனாகப் பிறந்து செண்பக மன்னன் எனப் பெயர் பெற்றான். இறைவன் ஆணைப்படி கோவிற்புரியையும் (கோவில்பட்டியையும்), அதில் பூவனாதருக்‌கு கோவிலும் அமைத்து சாபநிவர்த்தி பெற்றான். செண்பக மன்னனால் தோற்றுவிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் அம்பாள் செண்பகவல்லி என்று பெயர் பெற்றாள். உள்ளமுடையான் (புலவர் கி.பி.1029க்கு முற்பட்டவர்) என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.

மது‌‌ரையில் எப்படியோ அதுபோல் இங்கும் அம்பாளுக்குத்தான் முக்கியத்துவம். இந்த சந்நிதி நு‌ழைவாயிலில் பிரம்மாண்டமான துவாரபாலகிகள் உள்ளனர். மூல விக்ரகம் எப்படியுள்ள‌தோ அப்படியேதான் அலங்காரம் செய்வது எல்லா கோயில்களிலும் உள்ள வழக்கம். அருள் தரும் அம்பிகை செண்பகவல்லி அம்பாள் 7 ஆடி உயரத்தில் எழில் ‌‌கொஞ்சும் தோற்றத்துடன் காட்சி தருகிறார். இங்கு மட்டும் நிற்கும் அம்பாளை, அமர்ந்துள்ளது போல அலங்காரம் செய்கிறார்கள்.

பூர்ணத்திரயேஸ்வரர் திருக்கோயில், திருப்பூனித்துறை

அருள்மிகு பூர்ணத்திரயேஸ்வரர் திருக்கோயில், திருப்பூனித்துறை, எர்ணாகுளம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 484 – 277 4007

காலை 4 மணி முதல் 11.15 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூர்ணத்திரயேஸ்வரர்
தீர்த்தம் பல்குண தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருப்பூனித்துறை
மாவட்டம் எர்ணாகுளம்
மாநிலம் கேரளம்

இப்பகுதியில் வாழ்ந்த ஒரு அந்தணர் தம்பதிக்கு நெடுங்காலமாகக் குழந்தை இல்லை. அந்தணருக்கு கடவுள் பக்தி கிடையாது. அவரது மனைவியோ விஷ்ணு பக்தை. தன் கணவனை மன்னித்து, தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என மனைவி அவரை வழிபட்டு வந்தாள். ஆனாலும், பெருமாள் மலடி என்ற இவளது பட்டத்தை தீர்க்கும் வகையில் குழந்தை பாக்கியத்தை தந்தாரே தவிர, பிறந்த குழந்தைகள் எதுவும் பிழைக்கவில்லை. ஒன்பது குழந்தைகள் பிறந்து இறந்தன. இதனால் அந்தணருக்கு பெருமாள் மீது கோபம் இன்னும் அதிகமானது. அந்தணரின் மாமனார், “மருமகனே. தாங்கள் பெருமாளிடம் கோபப்படுவதில் அர்த்தமில்லை. உங்களுக்கு அவர்மீது பக்தி இல்லாததே குழந்தைகளின் மரணத்திற்கு காரணம். பெருமாளை சரணாகதி அடைந்தால் இனிமேல் பிறக்கும் குழந்தை இறக்காதுஎன்றார். ஆனாலும், அந்தணர் அதைக் கண்டுகொள்ளவில்லை. அந்தணரின் மனைவி, தன் கணவன் திருந்தாததையும், பெருமாள் தன்னைச் சோதிப்பதையும் எண்ணி வேதனையில் தவித்தாள்.