Category Archives: சிவ ஆலயங்கள்

காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், கதிராமங்கலம்

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், கதிராமங்கலம், தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காளஹஸ்தீஸ்வரர்
அம்மன் ஞானாம்பிகை
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கதிர்வேய்ந்தமங்கலம், சிவமல்லிகாவனம்
ஊர் கதிராமங்கலம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

ஆந்திராவிலுள்ள காளஹஸ்திக்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்வதற்காக சென்று வருகிறார்கள். அங்கு செல்ல முடியாதவர்கள் இந்த கோயிலில் தர்ப்பணம் செய்து காளஹஸ்தியில் செய்த பலனைப் பெறலாம். “தென் காளஹஸ்திஎன்ற சிறப்பு பெயரும் இவ்வூருக்கு இருக்கிறது.

காளாத்தீஸ்வரர் திருக்கோயில், தென்காளஹஸ்தி, உத்தமபாளையம்

அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில், தென்காளஹஸ்தி, உத்தமபாளையம், தேனி மாவட்டம்.

+91- 4554 – 265 419, 93629 93967.

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருக்காளாத்தீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் ஞானாம்பிகை
தல விருட்சம் செண்பகம்
தீர்த்தம் உத்தரவாகினி
ஆகமம் காமீகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் உத்தமபாளையம்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார். ராணி மங்கம்மாள் ஆட்சியில், இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர், அவரது படையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தார். காளஹஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது தீவிர பக்தி கொண்டிருந்த அவர், அடிக்கடி அத்தலத்திற்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு வயதானபோது, காளஹஸ்தி செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவர், சுவாமியை வழிபட்டார். அப்போது அவருக்கு இத்தலத்தில் காட்சி தந்த காளாத்தீஸ்வரர், அவரது வேண்டுதலுக்காக இங்கேயே இலிங்க ரூபமாக எழுந்தருளினார். சிவன், “காளாத்தீஸ்வரர்என்றும், தலம் தென்காளஹஸ்திஎன்றும் பெயர் பெற்றது.