Category Archives: சிவ ஆலயங்கள்

ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் கோயில், ராமேஸ்வரம்

அருள்மிகு ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்.

+91-4573-221 223, 221 241

காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர்
தீர்த்தம் ஜடா மகுட தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் ராமேஸ்வரம்
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

வேத வியாசரின் மகனாகிய கிளி முகம் கொண்ட சுகர் பல்வேறு யாகங்களை செய்தார். ஆனால், தவயோக ஞானசித்திகளை அடைய முடியவில்லை. ராஜமுனி ஜனகரின் அறிவுறைப்படி சுகர் ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி, தியானலிங்க மூர்த்திகளாக விளங்கிவரும் ஞானேஸ்வரர், அஞ்ஞானேஸ்வரரை வழிபட்டு ஞானியாக திகழ்ந்தார்.

கொடுங்கோபியாகிய துர்வாச முனிவரும், சாந்தசீலராகிய பிருகு முனிவரும் வெவ்வேறு காலங்களில் புனித நீராடி அரிதான யோகசக்திகளை பெற்ற சிறப்புடையது இந்த ஜடாமகுட தீர்த்தம்.

ஜலகண்டேஸ்வரர் கோயில், கோட்டை, வேலூர்

அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், கோட்டை, வேலூர், வேலூர் மாவட்டம்.

+91 98947 45768, 98946 82111, + 416 222 3412, 222 1229

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஜலகண்டேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் கங்காபாலாறு, தாமரை புஷ்கரணி
ஆகமம் சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வேலங்காடு
ஊர் வேலூர்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் இலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். பிற்காலத்தில், இலிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடானது. இலிங்கத்தைப் புற்று மூடிவிட்டது. பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டபோது, அவரது கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்டுள்ள இலிங்கத்தைச் சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். பொம்மியும் பயபக்தியுடன் கோயில் எழுப்பினார். இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே சுவாமிக்கு ஜலகண்டேஸ்வரர்என்று பெயர் ஏற்பட்டது.