Category Archives: சிவ ஆலயங்கள்

எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், எமனேஸ்வரம் – பரமக்குடி

அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், எமனேஸ்வரம்பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்.

+91- 94860 13533

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் எமனேஸ்வரமுடையார்
உற்சவர் பிரதோஷநாயனார்
அம்மன் சொர்ணகுஜாம்பிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் எமதீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் எமனேஸ்வரம்
ஊர் பரமக்குடி
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சிவபக்தனான மார்க்கண்டேயர், அற்ப ஆயுளில் உயிர் பிரியும்படியான வரம் பெற்றிருந்தார். அவரது இறுதிக்காலத்தில் எமதர்மன், அவரது உயிரை எடுக்க வந்தார். அப்போது மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.

திருக்கடையூர் தலத்திற்கு அவர் சென்றபோது, எமன் பாசக்கயிறை வீசினான். அவ்வேளையில் அவர், சிவபெருமானை தழுவிக்கொள்ளவே பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. பணியை சரியாக செய்யாத எமதர்மனை, சிவபெருமான் இடது காலால் எட்டி உதைத்தார்.

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தகுடி

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தகுடி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 239389

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஏகாம்பரேஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர்
அம்மன் காமாட்சி
தீர்த்தம் அனுமன் தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் மானந்தகுடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

கார்த்தவீரியன் எனும் பக்தன் ஒருவன் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் அவனது பூஜைக்கு தொந்தரவு செய்தார். இதனால் கோபமடைந்த கார்த்தவீரியன், ஆஞ்சநேயரை சபித்து விட்டான். தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவன் அவருக்கு அம்பிகையுடன் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தருளினார். அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார் ஆஞ்சநேயர். எனவே இத்தலம் அனுமன் ஆனந்த குடிஎன்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மானந்தகுடிஎன்று மருவியது.