அருள்மிகு அறப்பளீசுவரர் கோயில், கொல்லிமலை

அருள்மிகு அறப்பளீசுவரர் கோயில், கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம்.

மூலவர் அறப்பளீசுவரர்
உற்சவர் தாயம்மை
புராணப்பெயர் கொல்லி அறப்பள்ளி, வளப்பூர்நாடு,

கொல்லி குளிரறைப்பள்ளி

ஊர் கொல்லிமலை
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு
வழிபட்டோர் காலாங்கி முனிவர், பதினெண் சித்தர்கள்
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

வைப்புத்தலப் பாடல்கள்:

சம்பந்தர் அறப்பள்ளி அகத்தியான் (2-39-4).

அப்பர் – 1. கொல்லி யான்குளிர் (5-34-1)

இன்று மக்கள் வழக்கில் கொல்லிமலைஎன்று வழங்குகிறது. இயற்கை வளம் மிக்க மலை. ‘வல்வில்ஓரிஎன்னும் மன்னன் ஆண்ட பகுதி. காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்.

அறை = சிறிய மலை. மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர்என்றாயிற்று.

இக்கோயிலுக்குப் பக்கத்தில் மீன்பள்ளிஆறு ஓடுகிறது; இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.

இக்கோயிலுக்கு மேற்கில் கொல்லிப்பாவைஎன்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று உள்ளது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.

அருள்மிகு கோடிக்குழகர் கோயில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், கோடியக்காடு

அருள்மிகு கோடிக்குழகர் கோயில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், கோடியக்காடு,நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 – 4369 272 470 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்
அம்மன் அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி
தல விருட்சம் குராமரம்
தீர்த்தம் அக்னி தீர்த்தம் (கடல்), அமுதகிணறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கோடி, திருக்கோடிக்குழகர், குழகர் கோயில்
ஊர் கோடியக்காடு
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர்

மிகவும் பழமையானது இந்தக்கோயில். இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல் வழியே மிகக் குறுகிய தூரத்தில் இலங்கை இருக்கிறது. எனவே, இங்கிருந்து பாலம் அமைத்து இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்தான் சுக்ரீவன். ஆனால், இராமன் இங்கு பாலம் அமைக்க மறுத்துவிட்டார். இலங்கையின் பின்பக்கமாக கோடியக்காடு அமைந்துவிட்டதால், இராமபிரான் பின்பக்கமாக சென்று இராவணனைத் தாக்குவது தனக்கு பெருமை தராது எனக் கருதி, இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்றுவிட்டார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் இராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது. இராமன் இலங்கை செல்லும்போது இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். இவருக்கு அமிர்தகடேஸ்வரர்என்ற பெயரும் உண்டு.

திருப்பாற்கடலில் அமுதம் கடையும்போது அசுரர்கள் சூறாவளியை ஏற்படுத்தினர். அமுதப் பாத்திரத்தை ஏந்திச் சென்ற வாயுபகவான் அந்த சூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அமுதம் சிறிதளவு சிந்தியது. அதை முருகப்பெருமான் ஒரு கலசத்தில் ஏந்திக்கொண்டார். அந்த கலசத்துடன் அவர் காட்சி தருகிறார். இவரை வணங்குவோருக்கு ஆயுள்விருத்தி ஏற்படும். இங்கே சுவாமியை விட முருகனுக்கே முக்கியத்துவம். அருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வூர் சுப்பிரமணிய சுவாமியை புகழ்ந்து பாடியுள்ளார். சுந்தரரால் பாடல்பெற்ற தலம் இது. மிகவும் பழமையான இந்தக்கோயிலில் அம்பாள் மையார்தடங்கண்ணி அழகுபொங்க காட்சி தருகிறாள்.