வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல்

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல், புதுக்கோட்டை மாவட்டம்.

+91-4322-221084, 9486185259

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வியாக்ரபுரீஸ்வரர்
அம்மன் பார்வதி தேவி
தல விருட்சம் வன்னி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவேங்கைபதி
ஊர் திருவேங்கைவாசல்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

இந்திர சபைக்கு,ஒருமுறை காமதேனு தாமதமாக சென்றது. கோபமடைந்த இந்திரன், பூலோகத்தில் சாதாரணப்பசுவாக பிறந்து திரிவாய்என சாபமிட்டான். வருத்தமடைந்த காமதேனு பூலோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவரிடம் சாப விமோசனத்திற்கு ஆலோசனை கேட்டது. அதற்கு அவர், “இங்கு சுயம்புமூர்த்தியாக உள்ள சிவபெருமானுக்கு உனது இரு காதுகளில் கங்கை நீரை நிரப்பிக்கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் உன் சாபம் நீங்கும்என்றார்.

பசுவும் முனிவரின் உபதேசப்படி தினமும் அபிஷேகம் செய்து வழிபட்டது. ஒருநாள் சிவன் பசுவின் பக்தியை சோதிக்க விரும்பினார். பசு அபிஷேகத்திற்கு வரும் போது புலி வடிவெடுத்த சிவன்,”உன்னை கொன்று பசியாறப்போகிறேன்என்றார். அதற்கு பசு,”நான் சிவ பூஜைக்காக சென்று கொண்டிருக்கிறேன். பூஜையை முடித்து விட்டு நானே உன்னை தேடி வருகிறேன். அதன் பின் நீ என்னை கொன்று உன் பசியாறலாம்என்றது.

விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் .

+91- 44 – 2432 1793

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும், அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தை கைப்பற்றிய அவர்கள், இந்திரலோகத்தையும் கைப்பற்றி அங்கும் ஆட்சியமைத்தார்கள். தேவர்களின் தலைவன் இந்திரன், இந்திராணியுடன் பூலோகம் வந்து சீர்காழி என்ற புண்ணிய தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி, மூங்கிலாக வடிவெடுத்து சிவபெருமானை வழிபட்டு வந்தான். இந்திர லோகத்தை மீட்டுத் தரும்படி சிவபெருமானை பகல் வேளையில் வழிபட்டனர். இரவில் யார்கண்ணிலும் படாதபடி கைவிடேலப்பரின் கையில் உள்ள தாமரை பூவிதழ்களின் நடுவே தங்கி, தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இவர்களது கடும் தவத்திற்கு மகிழ்ந்த சிவன், சிவலோகம் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கக் கூறினார். இந்திரன், இந்திராணியை கைவிடேலப்பரிடம் ஒப்படைத்து விட்டு சிவலோகம் சென்றான். ஆனால் கைவிடேலப்பரோ, தனது காவல் கணக்குகளை சிவனிடம் ஒப்படைப்பதற்காக சிவலோகம் வந்தடைந்தார். அப்படி வரும்முன் இந்திராணியை, தனது தளபதியிடம் ஒப்படைத்தார். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூரபத்மனின் தங்கை அஜமுகி அழகே உருவான இந்திராணியை, தன் அண்ணனுக்கு மணமுடிக்க எண்ணி, அவளைக் கவர்ந்து செல்ல முயன்றாள். மகாகாளனோ அஜமுகியிடம் சண்டையிட்டு அவளது கரத்தை வீழ்த்தி இந்திராணியை மீட்டார். அந்த அரக்கியின் கை விழுந்த காடு தான் கைவிழுந்த சேரி.” அது தற்பொழுது,”கைவிலாஞ்சேரிஎன அழைக்கப்படுகிறது. சாஸ்தா தனக்கு அளித்த பொறுப்பை ஏற்று இந்திராணியை காப்பாற்றி பேரருள் புரிந்தார். இந்த நிகழ்ச்சி நடந்த இடமாகிய சீர்காழி தென்பாதியில் சாஸ்தாவின் கோயில் உள்ளது.