அகத்தீஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம்

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 250 882

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகத்தீஸ்வரர்
உற்சவர் அகத்தியர்
அம்மன் லோபமுத்திரை
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, பூமியை சமப்படுத்த அகத்தியர் தென்திசை நோக்கி வந்தார்.

பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் அவர், பல இடங்களில் சிவபூஜை செய்தார். இவ்வூரிலுள்ள காசிபநாதரை பூஜித்துவிட்டு, பொதிகை மலைக்கு கிளம்பினார். அப்போது அவருக்கு பசி எடுத்தது. அவ்வேளையில் அகத்தியரை தரிசிக்க சிவபக்தர் ஒருவர் வந்தார். அவரிடம் தனக்கு அமுது படைக்கும்படி கேட்டார் அகத்தியர். அவர் தன் இருப்பிடத்திற்கு சாப்பிட அழைத்தார். ஆனால், அகத்தியர் அவரிடம் ஒரு புளியமரத்தடியில் காத்திருப் பதாகச் சொல்லிவிட்டார். சிவபக்தரும் அன்னம் எடுத்து வரக்கிளம்பினார். அவர் வருவதற்கு தாமதமாகவே, அகத்தியர் சாப்பிடாமலேயே பொதிகை மலைக்குச் சென்று விட்டார். அதன்பின் சிவபக்தர் சாதமும், அரைக்கீரையையும் சமைத்து எடுத்து வந்தார். அகத்தியர் சென்றதைக் கண்ட அவர், அகத்தியர் உணவை சாப்பிடாமல் தான் இருப்பிடம் திரும்பமாட்டேன் என சபதம் கொண்டார். அகத்தியரை வேண்டி தவமிருந்தார். சிவபக்தரின் பக்தியை மெச்சிய அகத்தியர் அவருக்கு காட்சி கொடுத்து, அன்ன அமுது சாப்பிட்டார். இந்த நிகழ்வு நடந்த இடத்தில் பிற்காலத்தில், அகத்தியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவனருள் பெற்றவர் என்பதால் இவர், “அகத்தீஸ்வரர்என்று பெயர் பெற்றார்.

ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர்

அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர், சிவகங்கை மாவட்டம்.

+91- 94438 33300

காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை மணி 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆழிகண்டீஸ்வரர் (மணிகண்டீஸ்வரர்)
அம்மன் சவுந்தர்யநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் வைகை
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் இடைக்காட்டூர்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இத்தலத்தில் நந்தர், யசோதை என்னும் தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களது மகனாக பிறந்தவர் இடைக்காடர். இல்லறம், துறவறம் என இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதால் இவர், “இடைக்காடர்எனக் கூறுகின்றனர். அப்படி இருந்தும் எப்படி சித்தர் நிலைக்குச் சென்றார் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.