அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில், தொழுதூர்

அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில், தொழுதூர்– 612 804, திருவாரூர் மாவட்டம்.
***************************************************************************************************

+91- 94443 54461, +91- 94437 45732 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நல்ல மாரியம்மன்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் தொழுதூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

சமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா. இவர்களது மகன் பரசுராமன். ரேணுகாதேவி தன் கற்பின் வலிமையால், ஆற்றங்கரையில் இருக்கும் ஈர மணலில் குயவர்கள் செய்வது போல் குடம் செய்து அதில் தண்ணீர் எடுத்துக் கொண்டு தங்கள் ஆசிரமத்து பூசைக்காக கொண்டு செல்வாள்.

பச்சை மணலில் குடம் செய்வதே கடினம். அது காயவேண்டும். அப்புறம் அதில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு போவதென்பது முடியாத ஒன்று. இதைச் சாதிக்கும் அளவுக்குக் கற்புத்திறமுடையவள் அவள்.

ஒருநாள் வானத்தில் அழகே வடிவான கந்தர்வன் ஒருவன் தன் தேரில் சென்று கொண்டிருந்தான். அவனது உருவம் தண்ணீரில் தெரிந்தது. ஏறிட்டுப் பார்த்த ரேணுகா,”உலகத்தில் இவ்வளவு அழகானவர்களும் இருப்பார்களா?” என சாதரணமாகத்தான் நினைத்தாள். இதனால் அவளது மனம் களங்கப்பட்டு விடவில்லை. இருப்பினும், அவள் அன்று செய்த குடம் உடைந்து விட்டது. வெறுங்கையுடன் ஆசிரமம் திரும்பிய ரேணுகாவின் நிலையை சமதக்னி முனிவர் தன் ஞானக்கண்ணால் கண்டு அறிந்து கொண்டார்.

அருள்மிகு நாககாளியம்மன் திருக்கோயில், முத்துதேவன்பட்டி

அருள்மிகு நாககாளியம்மன் திருக்கோயில், முத்துதேவன்பட்டி-625 531 தேனி.
***************************************************************************************

+91- 97889 31246, 96779 91616 (மாற்றங்களுக்குட்பட்டவை)

செவ்வாய், வெள்ளியில் காலை 5- 9 மணி, மாலை 5.30- இரவு 9 மணி. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நள்ளிரவு 1 மணி வரை.

மூலவர்: – நாககாளியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – முத்துதேவன்பட்டி

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

திருமண பாக்கியத்தை வழங்கும் நாக காளியம்மன் முத்துதேவன்பட்டியில் அருள்பாலிக்கிறாள். இவளுக்கு மாதம் ஒருமுறை, பிரபல கோயில்களில் அம்பாள் அலங்காரம் செய்யப்படுவதும், அதை மாதம் முழுவதும் கலைக்காமல் வைத்திருப்பதும் விசேடம்.

முற்காலத்தில் இப்பகுதியில் சங்குப்பூ செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இங்கு ஒரு புற்று இருந்தது. அவ்வூர் சிவபக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை,”தான் புற்றுக்குள் இருப்பதாக உணர்த்தினாள்.” அதன்படி புற்றைப் பார்த்த போது, அதற்குள் அம்பாளின் சுயம்பு வடிவம் இருந்ததைக் கண்டனர். பின், அம்பிகைக்கு சிலை வடித்து, புற்றுக்கு மேலேயே பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினர். புற்றில் தானாகத் தோன்றியதால் அம்பிகைக்கு சுயம்பு நாககாளியம்மன்என்று பெயர் சூட்டப்பட்டது.