Category Archives: திருவண்ணாமலை

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், கீழ்கொடுங்கலூர், வந்தவாசி

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் கீழ்கொடுங்கலூர், வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்.
**********************************************************************************************************

+91- 4183-242 406 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்துமாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – கீழ்கொடுங்கலூர்

ஊர்: – வந்தவாசி

மாவட்டம்: – திருவண்ணாமலை

மாநிலம்: – தமிழ்நாடு

சமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள். கடைசிமகன் பரசுராமன். பரசுராமரின் அன்னை ரேணுகாதேவியின் கோயில்களில் இதுவும் ஒன்று. கற்பில் சிறந்தவளான ரேணுகாதேவி பச்சைமண்ணால் செய்யப்பட்ட குடத்தில் தண்ணீர் ஏந்தி தனது ஆசிரமத்திற்கு கொண்டு வருவாள். அவளது கற்பின் சக்தியால் இது முடிந்தது.

ஒருமுறை வானத்தில் கந்தர்வன் ஒருவன் சென்றுகொண்டிருந்தான். அவனது நிழல் ஆற்றில் தெரிந்தது. அதைப்பார்த்ததும் என்ன காரணத்தாலோ அவளது மனம் சலனப்பட்டது. ஆயினும் மனதில் விரசம் எதுவும் இல்லாமல்,”இப்படியும் ஆணழகர்கள் உலகத்தில் இருக்கிறார்களா?” என்று மட்டுமே எண்ணினாள். அந்த மாத்திரத்திலேயே அவள் கையிலிருந்த குடம் உடைந்துவிட்டது.

அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில், சந்தவாசல்

அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில், சந்தவாசல் – 606 905. திருவண்ணாமலை மாவட்டம்.
**********************************************************************************************************

+91 4181 243 207, 96773 41227 (மாறங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1 மணி வரை நடை திறந்திருக்கும்.

மூலவர்: – கங்கையம்மன்

உற்சவர்: – கங்காதேவி

தல விருட்சம்: – வில்வம்

தீர்த்தம்: – பெருமாள் தீர்த்தம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – சந்தவாசல்

மாவட்டம்: – திருவண்ணாமலை

மாநிலம்: – தமிழ்நாடு

தட்ச யாகத்திற்கு பின், அம்பிகையைப் பிரிந்த சிவன் பூலோகம் வந்தார். இதனால் உக்கிரத்துடன் இருந்த சிவனின் வெம்மையை, அவரது தலையில் இருந்த கங்காதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிவனை சாந்தப்படுத்தும்படி அவள் திருமாலை வேண்ட, அவரும் அவ்வாறே செய்தார். மேலும், அவரது உக்கிரமான பார்வையால் எரிந்த பகுதிகளைச் சுற்றிலும் ஏழு நீர் நிலைகளை உண்டாக்கி அணைத்தார். இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இங்கு பெருமாள், கங்காதேவிக்கு கோயில் கட்டினார். காலப்போக்கில் இக்கோயில்கள் மறைந்து போனது.

தென்னாட்டுக் கோயில்களை அந்நியர்கள் ஆக்கிரமிப்பு செய்தபோது, குமார கம்பணன் என்ற வடநாட்டு சிற்றரசர் படையெடுத்து சென்று அந்நியர்களை அழித்து, கோயில்களை மீட்டார். அவர் தென்னாடு வரும் வழியில், இவ்வூரில் தங்கினார். இப்பகுதியை ஆண்ட ராசநாராயண சம்போராயர், குமார கம்பணன் படையெடுத்து வந்ததாகக் கருதி அவருடன் போரிட்டார். போரில் கம்பணன் வென்றார். தோற்ற மன்னன் ராசகம்பீர மலையில் ஒளிந்து கொண்டார். அப்போது, குமார கம்பணனின் மனைவி, இத்தலத்தின் மகிமையறிந்து கங்காதேவிக்கு கோயில் எழுப்பினாள். போரில் வென்ற குமார கம்பணர், ராசநாராயண சம்போராயரை அழைத்து, நாட்டைத் திருப்பிக்கொடுத்தார். இதனால் சேனைக்கு மீண்டான் வாசல்என்று இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது.