Category Archives: திருவண்ணாமலை

அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில், படவேடு

அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில், படவேடு, திருவண்ணாமலை மாவட்டம்.

+04181 248 224, 248 424 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.40 பகல் 1மணி, மாலை 3 இரவு 8.30 மணி வரை வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேட நாட்களில் தரிசன நேரம் மாறுபடும்.

மூலவர் ரேணுகாம்பாள்
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் கமண்டலநதி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் படவேடு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாக பிறந்து ஜமதக்னி முனிவரை மணம் முடித்து பரசுராமரைப் பெற்றெடுக்கிறாள். கற்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவள். கணவரது பூஜைக்கு தனது சக்தியை பயன்படுத்தி, தினமும் ஆற்றுமணலில் செய்த புது பானையால் கமண்டலநதியிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வது வழக்கம். ஒருமுறை வான்வெளியில் சென்ற கந்தர் வனின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டதால், சக்தியிழந்து ஆற்று மணலில் குடம் செய்ய முடியாமல் போனது. தன் மனைவியின் கற்புத்திறன் மீது சந்தேகம் கொண்ட, ஜமதக்னி முனிவர், தன் மகன் பரசுராமரிடம், தாயைக் கொல்லும்படி ஆணையிட்டார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப பரசுராமரும் தாய் ரேணுகா தேவியை வெட்டினார்.

அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில், வாழைப்பந்தல்

அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில், வாழைப்பந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.
***************************************************************************************************

காலை 6 மணி முதல் 10 மணி வரை  திறந்திருக்கும்.

மூலவர் பச்சையம்மன்
தல விருட்சம் வில்வ மரம், வேப்பமரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் வாழைப்பந்தல்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

பார்வதிதேவி, ஈசனின் இடப்பாகம் பெற்றிட வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வரும் வழியில் ஓரிடத்தில் வாழைப்பந்தல் அமைத்தாள். அங்கு மணலில் இலிங்கம் பிடித்து வழிபட எண்ணினாள். அதற்கு நீர் தேவை. உடனே தனது பிள்ளைகளான முருகனையும், கணேசனையும் அழைத்து நீர் கொண்டு வரச் சொல்கிறாள். இருவரும் புறப்பட்டனர். வெகு நேரமாகிவிட்டது. பிள்ளைகள் வரவில்லை. அன்னையே தனது கைப்பிரம்பினால் பூமியைத் தட்டி ஓர் நீரூற்றினை ஏற்படுத்துகிறாள். அந்நீரினைக் கொண்டு மணல் இலிங்கம் பிடித்து முடிக்கிறாள். அதன் பின்னரே கந்தனும், கணபதியும் ஆளுக்கொரு நதியோடு அன்னை முன் வந்து நின்றனர். அன்னை உண்டாக்கிய நதியோடு, மூன்று நதிகள் ஆயின. அம்மூன்று நதிகள் இங்கு கூடிடவே இவ்விடம் முக்கூட்டு என்று அழைக்கப்பட்டது. அன்னை சிவபூஜை செய்யும் வேளையில் அருகில் உள்ள கதலிவனத்தில்(வாழைத்தோப்பு) இருந்த அரக்கன் ஒருவன் இடையூறுகள் பல கொடுத்தான்!