Category Archives: சிவ ஆலயங்கள்

மூவர் திருக்கோயில், அழகப்பன் நகர், மதுரை

அருள்மிகு மூவர் திருக்கோயில், அழகப்பன் நகர், மதுரை.

+91 94431 06262

காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவன்
அம்மன் பார்வதி, சரஸ்வதி, லட்சுமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் அழகப்பன் நகர், மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களை இறைவன் செய்கிறார். இதைக் குறிக்கும் வகையில் இந்தக் கோயிலில் படைப்புக்கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களது தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதிக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. எனவே, இது மூவர் ஆலயம் எனப்படுகிறது. இங்குள்ள விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வவளமும், வேண்டிய காரியசித்தியையும் அருளும் விதத்தில் உள்ளதால் செல்வ சித்தி விநாயகர்எனப் பெயர் பெற்றுள்ளார்.

மொக்கணீஸ்வரர் திருக்கோயில், கூழைய கவுண்டன்புதூர்

அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில், கூழைய கவுண்டன்புதூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4296- 270 558, +91- 98652 95559

காலை காலை 10- 12 மணி வரை திறந்திருக்கும், மற்ற நேரங்களில் திறக்க வேண்டுமானால், முன் கூட்டியே அர்ச்சகரிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.

மூலவர் மொக்கணீஸ்வரர்
அம்மன் மீனாட்சி
தல விருட்சம் வில்வம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் குட்டகம்
ஊர் கூழைய கவுண்டன்புதூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இரண்டு வணிகர்கள் இத்தலம் வழியாக வியாபாரத்திற்காக வெளியூர் சென்றனர். அதில் ஒருவர் சிவபக்தர். தினமும் சிவவழிபாடு செய்யாமல் எந்தச் செயலையும் துவங்கமாட்டார். அவர்கள் இங்கு ஒருநாள் இரவில் தங்கினர். மறுநாள் காலையில் சிவபக்தர், சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், அவ்விடத்தில் இலிங்கம் எதுவும் இல்லை. அவருடன் வந்த நண்பர், சிவபக்த நண்பரின் பக்தியை கேலி செய்யும் விதத்தில், அவருக்கு தெரியாமல் குதிரைக்காக கொள்ளு வைத்திருந்த பையில் மணலை நிரப்பி, சிவலிங்கம் போல் தோற்றம் உருவாக்கி, மாலையிட்டு ஓரிடத்தில் வைத்தார். “நண்பா! இதோ சிவலிங்கம், இதை பூஜித்துக் கொள்என்றார். அப்பாவி பக்தரும், அதை நம்பி கோணிப்பை இலிங்கத்துக்கு பூஜை செய்தார். பூஜை முடிந்ததும்,”ஏமாந்தாயா! இது இலிங்கம் இல்லை, கோணிப்பைஎன்ற நண்பர், அதை எடுத்துக் காட்ட முயன்றார். ஆனால், அதை அசைக்கக்கூட முடியவில்லை. அது நிஜ இலிங்கமாக மாறியிருந்தது. இந்த அதிசயம் கண்டு நண்பரும் மனம் திருந்தினார். அவரும் சிவபக்தரானார்.