Category Archives: சிவ ஆலயங்கள்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுந்தரேஸ்வரர்
உற்சவர் சேக்கிழார்
அம்மன் மீனாட்சி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் தேவகோட்டை
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

சிவபக்தர்களுக்கு பெரிய புராணம் என்றால் உயிர். நாயன்மார்களின் வர லாற்றை விளக்கும் அற்புத நூல் இது. சேக்கிழார் சுவாமிகள் இதை இயற்றினார். அந்தப் பெருமானுக்கு கோயில் அமைக்க முயன்றார் வன்தொண்டர் என்ற புலவர். சிவவழிபாட்டின் முக்கிய நோக்கமே அடியார்களுக்கு தொண்டு செய்வதுதான். இங்கே சிவனடியாரான சேக்கிழாருக்கு, இன்னொரு தொண்டரான வன்தொண்டர் கோயிலே எழுப்ப முயற்சித்தார். ஆனால், சில சூழ்நிலைகளால் அது சிவன் கோயி லாயிற்று. மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அங்கே, சேக்கிழாரை உற்சவமூர்த்தியாக்கினார். அதில் சேக்கிழாருக்குத் தனியாக சன்னதி எழுப்பினார். இந்த கோயிலில் ஒலிப்பதற்காக, பெரிய மணி ஒன்றை வன்தொண்டர் நிறுவினார். அதில், “சேக்கிழார் கோயில் மணிஎன்று பொறிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிப்பட்டி

அருள்மிகு , தேனி மாவட்டம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்.

+91- 99527 66408, 94435 01421, 94434 47458

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

சிவனடியார்களாகவும், சிவனின் அம்சமாகவும் தோன்றியவர்கள் சித்தர்கள். இவர்களில் 18 சித்தர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சித்தர்களில் பலர் நம்நாட்டில் பல சிவத்தலங்களை தரிசித்திருந்தாலும், மதுரை மீனாட்சியிடமும், சுந்தரேஸ்வரரிடமும் மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டிருந்தனர். எனவே இவர்கள் நினைத்த போதெல்லாம் அன்னை மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தரிசிக்க விரும்பினர்.
பாண்டியர்களின் தலை நகராக மதுரை விளங்கியதால், இரவும் பகலும் மக்கள் நடமாட்டத்துடன் இருந்தது. இதனால் சித்தர்களால் மதுரையில் அமைதியாகத் தங்கி மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்க இயலவில்லை. எனவே இவர்கள் மதுரைக்கு அருகில் அமைதியான சூழ்நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இருப்பதை அறிந்தனர். உடனே அவர்கள் ஆண்டிகள் கோலத்தில் அங்கு சென்று தங்கி, தியானம் செய்வது, சிவபூஜை செய்வது என்ற சிவத் தொண்டில் ஈடுபட்டனர். அத்துடன் தாங்கள் விரும்பிய நேரத்தில் எல்லாம் மதுரைக்கு வந்துமீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்து வந்தனர். ஆண்டிகளாக சித்தர்கள் இங்கு வந்து தங்கியதால், இத்தலத்திற்கு ஆண்டிப்பட்டி என்ற பெயர் ஏற்பட்டதாகத் தலவரலாறு கூறுகிறது. மதுரை மீனாட்சி கோயில் போல, மிகவும் பழமையான இத்தலத்தில் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.

இவர்களில் சிவனாண்டி என்ற சித்தரும் ஒருவர்.இவர் பல காலம் இங்கு தங்கி சித்து விளையாட்டுக்கள் செய்து வந்தார். இவரது ஜீவ சமாதி இங்குள்ளது. இந்த சமாதிக்கு மேல் இத்தலத்தின் விருட்சமான வில்வமரம் அமைந்துள்ளது. தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இத்தலவிருட்சத்தின் கீழ் தரப்படும் விபூதியை பூசினால் நாள்பட்ட நோய்கள் விரைவில் குணமாகிவிடும் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.