Category Archives: சிவ ஆலயங்கள்

சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம்

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்.

+91-4322-221084, 99407 66340

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சத்தியகிரீஸ்வரர்
அம்மன் வேணுவனேஸ்வரி
தல விருட்சம் மூங்கில்மரம்
தீர்த்தம் சந்திரபுஷ்கரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமய்யம்
ஊர் திருமயம்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

அருகில் உள்ள பெருமாள் கோயிலுடன் இணைந்து கட்டப்பட்டிருக்கும் இந்த சத்தியகிரீஸ்வரர் உடனுறை வேணுவனேஸ்வரி அம்பாள் திருக்கோயில் அருள் வாய்ந்தது. தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில், சத்திய தேவதை மான் உருக்கொண்டு இங்கு ஓடி ஒளிந்து கொண்டு பெருமாளை வணங்கிவந்தாளாம்.

சதாசிவமூர்த்தி திருக்கோயில், புளியரை

அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில், புளியரை, திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4633 – 285518, 285490

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சதாசிவமூர்த்தி
உற்சவர் சதாசிவம்
அம்மன் சிவகாமி
தல விருட்சம் புளியமரம்
தீர்த்தம் சடாமகுடம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் புளியரை
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

சமண மதம் மேலோங்கிருயிருந்த காலத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் அவர்களின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது. இதனால் சிவபக்தர்கள் நடராஜர் சிலையை எடுத்துக் கொண்டு தெற்கே வந்தனர். திரிகூடாசல மலை எனப்படும் குற்றாலத்தைக் கடந்து, புளியமரங்கள் நிறைந்த வனத்தை அடைந்தனர். சுவாமியை அங்கிருந்த பெரிய புளிய மரப்பொந்து ஒன்றில் மறைத்து வைத்தனர். அம்மரத்தின் உரிமையாளரின் கண்ணில் சிலை பட்டது. அவர் தினமும் நடராஜரை வணங்கி வந்தார். பல ஆண்டுகள் கழித்து சிலையை மீட்க சிதம்பரம் பக்தர்கள் புளியமரப் பொந்தை தேடி வந்தனர். சிலையை மீட்டுச்சென்றனர்.