பாவங்கள் விலக

பாவங்கள் விலக

பாவங்கள், தற்பெருமை, சீற்றம், காம வெறி, பேராசை, பெருந்தீனி விருப்பம், பொறாமை, சோம்பல் ஆகியனவாம்.

மனதால் செய்யப்படும் பாவங்கள்:

பிறரது செல்வத்தையும் பொருளையும் விரும்புவது, பிறரிடம் இருப்பதைக் கண்டு ஏங்குவதும் ஆகும்.

பிற உயிர்கள் அழிந்துவிடக்கூடாதா என மனத்தால் நினைத்தல். எதிர்மறை எண்ணங்கள் கொண்டிருத்தல். அதாவது, ‘பிறருக்கு ஈவதால் எந்தப் புண்ணியமும் இல்லை‘; ‘இவ்வுலகத்தில் பாவங்களும் இல்லை, பரலோகமும் இல்லைஎன்பது போன்ற எண்ணத்தைக் கொண்டிருத்தல்.

வாய் மூலம் செய்யப்படும் பாவங்களாவன:

தெரியாததை தெரியும் என்று கூறுதல்; காணாததைக் கண்டாதாகச் சொல்லுதல். இவ்வாறு சுய இலாபத்துக்காக பொய் பேசுதல் பாவச் செயலாகும்.

பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தும் விதமாகவும், கலகமூட்டும் நோக்கத்துடனும் கோள் சொல்லுதல் பாவம்.

பிறருக்கு வருத்தத்தையும், துன்பத்தையும் அளிக்கும் விதமாக கடுமையான மொழிகளால் பேசுதல். கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தல்.

பிரலாபித்தல் என்று சொல்லக்கூடிய சமயம் அறியாது பேசுதல்; உண்மையில்லாததைச் சொல்லுதல்; காரணமின்றி உளறுதல்; அர்த்தம் மற்றும் நியாயமற்ற பேச்சு.

இவைகள் விலக தானே தவறை உணர்ந்து திருந்தவேண்டும். அந்த மனப்பக்குவத்தை அடைய கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுதல் ஒன்றே வழி.

இமையவரப்பன் திருச்சிற்றாறு ஆழப்புழா
மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி உத்தரகோசமங்கை இராமநாதபுரம்
ஆதிஜெகநாதப் பெருமாள் திருப்புல்லாணி இராமநாதபுரம்
பகவதி அம்மன் கன்னியாகுமரி கன்னியாகுமரி
பவளவண்ணபெருமாள் திருபவளவண்ணம் காஞ்சிபுரம்
தழுவக் குழைந்தீஸ்வரர் (காமாட்சி அம்பாள்) மேல் படப்பை காஞ்சிபுரம்
பரமபதநாதர் பரமேஸ்வர விண்ணகரம் காஞ்சிபுரம்
மன்னீஸ்வரர் அன்னூர் கோயம்புத்தூர்
மொக்கணீஸ்வரர் கூழைய கவுண்டன்புதூர் கோயம்புத்தூர்
அரங்கநாதர் பாலமலை கோயம்புத்தூர்
திருத்தளிநாதர் திருப்புத்தூர் சிவகங்கை
திருவேட்டீஸ்வரர் திருவல்லிக்கேணி சென்னை
மருந்தீஸ்வரர் திருவான்மியூர் சென்னை
இரவீஸ்வரர் வியாசர்பாடி சென்னை
கரிவரதராஜப்பெருமாள் ஆறகழூர் சேலம்
சுவாமிநாத சுவாமி சுவாமிமலை தஞ்சாவூர்
கோடீஸ்வரர் திருக்கோடிக்காவல் தஞ்சாவூர்
சாரநாதப்பெருமாள் திருச்சேறை தஞ்சாவூர்
இராமலிங்கசுவாமி பாபநாசம் தஞ்சாவூர்
தயாநிதீஸ்வரர் வடகுரங்காடுதுறை தஞ்சாவூர்
பிரசன்ன வெங்கடாஜலபதி குணசீலம் திருச்சி
வாலீஸ்வரர் குரங்கணில்முட்டம் திருவண்ணாமலை
ஒத்தாண்டேஸ்வரர் திருமழிசை திருவள்ளூர்
ஜெகந்நாதப்பெருமாள் திருமழிசை திருவள்ளூர்
கண்ணாயிரநாதர் திருக்காரவாசல் திருவாரூர்
பூலாநந்தீஸ்வரர் சின்னமனூர் தேனி

சுருளிவேலப்பர்

சுருளிமலை

தேனி

பூதநாராயணசுவாமி சுருளிமலை தேனி
கடைமுடிநாதர் கீழையூர் நாகப்பட்டினம்
கேடிலியப்பர் கீழ்வேளூர் நாகப்பட்டினம்
வெள்ளடைநாதர் திருக்குருகாவூர் நாகப்பட்டினம்
ஐராவதீஸ்வரர் ஆனையூர், மதுரை மதுரை
இம்மையிலும் நன்மை தருவார் மேலமாசி வீதி மதுரை மதுரை
சந்திரமவுலீஸ்வரர் திருவக்கரை விழுப்புரம்
சொர்ணகடேஸ்வரர் நெய்வணை விழுப்புரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *