அருள்மிகு பல்லவனேஸ்வரர் கோயில், பூம்புகார்

அருள்மிகு பல்லவனேஸ்வரர் கோயில், (பல்லவனீச்சுரம் காவிரிப்பூம்பட்டினம்) பூம்புகார், சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 – 94437 19193 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பல்லவனேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சவுந்தர்யநாயகி
தல விருட்சம் மல்லிகை
தீர்த்தம் ஜானவி, சங்கம தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பல்லவனேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம்
ஊர் பூம்புகார்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர், கடல் கடந்து வாணிபம் செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, திருவெண்காடர் சிவனை வழிபட்டார். இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார்.

ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார்.

அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்

அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 260 151 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாயாவனேஸ்வரர்
அம்மன் குயிலினும் இனி மொழியம்மை (கோஷாம்பாள்)
தல விருட்சம் கோரை
தீர்த்தம் ஐராவதம், காவிரி, சங்க முக தீர்த்தங்கள்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சாய்க்காடு, மேலையூர்
ஊர் சாயாவனம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் அப்பர், ஞானசம்பந்தர்

மிகப்பழைய சிவாலயம். காசிக்கு சமமாக சொல்லப்படும் 6 தலங்களுள் இதுவும் ஒன்று.

தமிழில் திருச்சாய்க்காடு என்று பெயர். “சாய்என்றால் கோரை என்று பொருள் . பசுமையான கோரைகள் மிகுந்திருந்த தலமாதலால் இத்தலம் சாய்க்காடுஎனப்பட்டது .

இந்திரன் தாயார் தினமும் இந்திர லோகத்திலிருந்து இங்கு வந்து ஈசனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் . பூஜை வேளையில் தாயைக்காணாது இந்திரன் ஒருநாள் தொடர்ந்து வந்து பார்க்கையில், அவர் இத்தலத்திற்கு வருவது கண்டான் . தாய்க்காக இத்தலத்தையே அவன் பெயர்த்தெடுக்க முயன்று தனது தேரில் பூட்டியபோது, ஈஸன் தன் கால்விரலால் சற்றே பூமியில் அழுத்த இந்திரன் தேர் எழும்பாதது கண்டான். தன் தவறை உணர்ந்து இத்தலத்து ஈசனிடம் பிழை பொறுத்தறுளுமாரு வேண்டினான் . ஈசனும் அவனை பொறுத்து அருள் வழங்கினார் என்பது தல வரலாறு.

இயற்பகை நாயனார் பிறந்தது இத்தலத்தில்தான்.