அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல்

அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல், விருது‌நகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கருநெல்லிநாதர் (சொக்கப்பன்)

அம்மன்

சொக்கி

தலவிருட்சம்

கருநெல்லி

தீர்த்தம்

அர்ச்சுனாநதி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப்பெயர்

திருத்தங்கால்

ஊர்

திருத்தங்கல்

மாவட்டம்

விருதுநகர்

மாநிலம்

தமிழ்நாடு

இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதி ஆறுமுகத் தம்பிரான் என்னும் முருக பக்தரால் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஆண்டுதோறும் பழனிக்கு சென்று தண்டாயுதபாணிக் கடவுளை தரிசிப்பது வழக்கம். தள்ளாத வயதில் ஒரு சமயம் பாதயாத்திரை‌ மேற்கொண்ட போது குறுக்கிட்ட வாய்க்காலை கடக்க முடியாமல் அங்கேயே தங்கி இறைவன் கட்டளைப்படி பூஜை செய்தார். பூஜை செய்ய அடுப்பு மூட்டக் குழி தோண்டிய போது தங்கத் காசுகள் கிடைக்க முருகனருளால் கிடைத்த அக்காசுகளை வைத்து முருகனுக்கே கோயில் கட்டினார். பழனி முருகன் போல் திருத்தங்கல் பழனியாண்டி அருள் சக்தி கொண்டவராய் இப்பகுதி மக்களால் ‌‌கொண்டாடப்படுகிறார்.

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம்

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம், சென்ட்ரல் ரயில்நிலையம் அருகில், சென்னை.

+91- 44 -2535 2192 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கந்தசுவாமி
உற்சவர் முத்துக்குமாரர்
அம்மன் வள்ளி, தெய்வானை
தல விருட்சம் மகிழம்
தீர்த்தம் சரவணப் பொய்கை
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஆகமம் குமார தந்திரம்
ஊர் கந்தக்கோட்டம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்தனர். வழியில் கனத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே, அங்கேயே ஓர் மடத்தில் தங்கினர். அன்றிரவில் சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன், தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறியருளினார். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அச்சிலையை எடுத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே கோயில் கட்டினர்.