Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், ஆண்டிப்பட்டி

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், ஆண்டிப்பட்டி-625 512, தேனி மாவட்டம்.
*****************************************************************************************

+91 90429 60299, 92451 91981 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் பகலில் நடை சாத்துவதில்லை.

மூலவர்: – காளியம்மன்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஆண்டிப்பட்டி

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஆண்டிப்பட்டி , முட்புதர் சூழ்ந்த பகுதியாக இருந்தது. ஊருக்கு நடுவில் ஒரு திரிசூலத்தை வைத்து, பக்தர்கள் காளியம்மனாக வழிபாடு செய்து வந்தனர். இங்கு வசித்த பேரிநாயக்கர் என்ற முதியவரின் கனவில் தோன்றிய காளி,”கேரளாவில் சோட்டானிக்கரையிலிருந்து ஆற்றில் அடித்துவரப்பட்ட எனது சிலை, வடமலை நாயக்கன் பட்டியில் வைகை ஆற்றுமணலில் புதைந்து கிடக்கிறது. பதினாறு அடி தோண்டினால், என் சிலை கிடைக்கும். அதை எடுத்து வந்து ஆலயம் அமைத்து வழிபாடு செய்யுங்கள்என்றாள். மறுநாள் பேரிநாயக்கரின் தலைமையில் ஊர்மக்கள் சென்று அம்பாள் சிலையை எடுத்து வந்து ஆலயம் அமைத்தனர். அவளுக்கு காளிஎன்று பெயர் சூட்டினர்.

நீதியின் காவல்தெய்வம் :

கருவறையில் நீதியை நிலைநாட்டுபவளாக காளி வீற்றிருக்கிறாள். ஐந்து தலைநாகம் இவளுக்கு குடைபிடித்துள்ளது. வலது காலை மடித்தும், இடது காலை தரையில் ஊன்றியும் உள்ள இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. அவற்றில் உடுக்கை, பாம்பு, சூலம், கபாலம் ஏந்தியிருக்கிறாள். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுபவளாக இருக்கும் இவளை வழிபட்ட பின்னரே சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஊர்க்காவல் தெய்வங்களுக்குத் திருவிழா நடக்கும். தனக்கு குறை நேர்ந்தாலும் பொறுத்துக் கொள்ளும் இவள், தன் பக்தர்களுக்கு யாராவது தீங்கு எண்ணினால் பொறுத்துக் கொள்ள மாட்டாள்.

அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான்

அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான்– 625 214, மதுரை மாவட்டம்.

*******************************************************************************************************

+91-4543-258987, 94431 92101(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

ரேணுகாதேவி சமதக்கினி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள். கணவரின் பூசைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வனின் நிழலை நீரில‌ே கண்டு அவன் அழகில் மயங்கி வியந்ததால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார்.

மகன் பரசுராமரை அழைத்து, தாயின் தலையை வெட்டிக் ‌கொண்டு வரும் படி கூற, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் வாக்குகிணங்க அன்னையின் தலையைப் பரசுராமர் கொய்தார். இருப்பினும் பெற்ற தாயை வெட்டி விட்டேன் என்று கூற முனிவரும் வரம் கேள் தருகிறேன் என்று பரசுராமரிடம் கூறினார். தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி ‌‌கேட்டார். முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதித் தந்தார். அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்துத் தண்ணீரை தெளி்க்க உயிர் பெற்றார். அதனால் அந்த உயிர் அரக்கி ஆகின்றது. அரக்கியின் சினம் அதிகரிக்கின்றது. அரக்கியை அடக்கும் பொருட்டு இத்தலத்தில் அமைதியின் வடிமாக மாரி எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். இன்னமும் கர்ப்பகிரகத்தில் அம்மனுக்கு பின்புறம் சந்தனமாரி எனும் நின்ற நிலையிலான ஆக்ரோச ரேணுகாதேவி காட்சி தருகிறாள்.

அழகிய பசுமை வனம் போன்ற சோழவந்தான் பகுதியின்‌ வைகை ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஆலயம். இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.