Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், சத்திரம் கிராமம்

அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், சத்திரம் கிராமம்புதுக்கோட்டை மாவட்டம் .
**************************************************************************************************

+91 98435 90356 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – காமாட்சியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – சத்திரம் கிராமம்

மாவட்டம்: – புதுக்கோட்டை

மாநிலம்: – தமிழ்நாடு

சிதம்பரம் அருகேயுள்ள நல்லினம் கிராமத்தில், சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பூசாரி இருந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவிலில் (மாணிக்கவாசகரை சிவன் ஆட்கொண்டு உருவமின்றி அருவமாய் இருக்கும் தலம்) வசித்து வந்தார். அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. புகுந்த வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்பெண் அங்கிருந்து கைக்குழந்தையான மகனுடன் வெளியேற்றப்பட்டாள். வீட்டில் வைத்து வணங்கிய காமாட்சி அம்மன் திருவுருவத்துடன் அவள் தன் உடன்பிறந்தவர்கள் வசித்த காளையார்கோவிலுக்கு வந்தாள். இவ்வூர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.

வரும் வழியில், அவள் சில குடுகுடுப்பைக்காரர்களைச் சந்தித்தாள். அவர்கள் அவள் ஊர் வரை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவ்வூரிலேயே தங்கி விட்டனர்.

அவளது குழந்தை வளர்ந்து பத்து வயதை எட்டினான். விளையாடுவதற்காக தாயிடம் உடுக்கு ஒன்று வாங்கித் தரும்படி கேட்டான். அம்மாவும் மகனுக்கு அதை அன்புடன் வாங்கிக் கொடுத்தாள். அதை அடித்துக் கொண்டே சிறுவன் விளையாடிய போது, வீட்டில் சிலையாய் இருந்த அன்னை காமாட்சி அதை ரசித்துக் கேட்டாள். அதற்கு பரிசாக அக்குழந்தை உடுக்கடித்தபடியே எது சொன்னாலும், பலிக்கும் பாக்கியத்தை கொடுத்தாள். இது குழந்தைக்கோ, குழந்தையின் தாய்க்கோ தெரியாது. ஊரிலுள்ளோர், “இந்த குழந்தை இவ்வளவு அழகாக குறி சொல்கிறானே! இவன் என்ன சொன்னாலும் பலிக்கிறதே!, எல்லாம் அவனது அன்னை பூஜிக்கும் காமாட்சியின் மகிமைதான் என எண்ணினர்.

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், குன்னியூர்

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மன்னார்குடி, குன்னியூர் தஞ்சாவூர் மாவட்டம் .
********************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை திறந்திருக்கும்.

மதுவன சேத்திரம் என்று அழைக்கப்படும் மன்னார்குடி நகரின் கீழ்திசையில் அகத்திய நதியின் வடக்கிலும், அரிச்சந்திரா நதியின் தெற்கிலும் கன்னிபுரி என்ற கிராமம் இருக்கிறது. இப்போது இவ்வூர் குன்னியூர் எனப்படுகிறது.

இங்கே சீதளா பரமேசுவரிஎன்ற பெயரில் காமாட்சியம்மன் குடிகொண்டிருக்கிறாள். “காமஎன்ற சொல்லுக்கு அன்புஎனப் பொருள். “அக்ஷிஎன்ற சொல்லுக்கு கண் என்று பொருள். “அன்பு பொங்கும் கண்களை உடையவள்என்று காமாட்சிக்குப் பொருள் கொள்ளலாம்.

மற்றொரு பொருளின் படி காஎன்ற எழுத்திற்கு சரசுவதிஎனப் பொருள். “மாஎன்ற சொல்லுக்கு மகாலட்சுமிஎன்று பொருள். இருவரையும் தங்கள் கண்களாகக் கொண்டவள் காமாட்சி. இது சங்கராச்சாரியார் வாக்கு.

இந்த கோயிலில் உள்ள காமாட்சி விக்கிரகம் மிகவும் சிறியது. 200 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக தோன்றியது. இங்கு அம்மன் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். ஆரம்பத்தில் கீற்றுக் கொட்டகையே இருந்தது. பின்பு பெரிய கோயிலாக கட்டப்பட்டது.

சிறப்பம்சம்: இங்குள்ள அம்மன் பூமியில் இருந்த தானாக தோன்றியவள் என்பதால், மக்கள் கோயில் அருகே செல்லும் போது வேகமாக அதிர்ந்துகூட நடக்க மாட்டார்கள். மிகமிக மெதுவாக அடிமேலடி வைத்து நடந்து செல்வார்கள்.