Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வண்டியூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தெப்பக்குளம், வண்டியூர் – 625 009, மதுரை மாவட்டம்.
***********************************************************************************************************

+91-452 – 2311 475 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – மாரியம்மன்,பேச்சியம்மன்

அம்மன்: – மாரியம்மன், துர்க்கை

தல விருட்சம்: – வேம்பு, அரசு

தீர்த்தம்: – தெப்பக்குளம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – மாமண்டூர்

ஊர்: – வண்டியூர்

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரினை மன்னன் கூன்பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தார். அப்போது மதுரையின் கிழக்கே, தற்போது கோயில் வீற்றிருக்கும் பகுதி, மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அக்காட்டினை குறும்பர் எனும் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியையே அழித்து வந்தனர்.

நாளுக்கு நாள் அவர்களின் தொந்தரவு கூடுதலாகவே, ஓர் நாள் இப்பகுதிக்கு வந்த மன்னர் அவர்களின் கொட்டத்தினை அடக்கி விரட்டியடித்தார். அவர்களை விரட்டியபின் தனது வெற்றியினை ஆண்டவனுக்கு சமர்ப்பித்து வணங்கிட, அருகே வைகையில் கிடைத்த அம்பாளை (தெற்கு கரையில் தற்போது கோயில் வீற்றுள்ள பகுதியில்) வைத்து பிரதிட்டை செய்து வழிபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இத்தெப்பம் தோண்டும்போது கிடைத்த மிகப்பெரிய முக்குறுணி விநாயகர் சிலை ஒன்று மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாட்டிற்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

இத்தலம் அம்மை நோய் தீர்க்கும் தலம் என்ற பெருமை உடையது.இங்கு அம்மன் பிரதானம் என்பதால், வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சி மாவட்டம்.
*****************************************************************************

+91-431 – 267 0460 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

தல விருட்சம்: – வேம்பு

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – கண்ணபுரம்

ஊர்: – சமயபுரம்

மாவட்டம்: – திருச்சி

மாநிலம்: – தமிழ்நாடு

இசுலாமியர்களின் படையெடுப்பின்போது சமயபுரம் கோயிலில் இருந்து உற்சவர் சிலையை வீரர்கள் தூக்கி சென்றுவிட்டனர். சமயபுரத்திலிருந்து செல்லும்போது ஒரு கால்வாய் குறுக்கிட்டது. அம்பாளை கரையில் வைத்துவிட்டு கால்வாய்க்குள் இறங்கி வீரர்கள் கை,கால் கழுவினர். திரும்பிவந்து பார்த்தபோது அங்கு சிலை இல்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்து சோர்ந்து சென்றுவிட்டனர்.

இதன்பிறகு அப்பகுதிக்கு விளையாடச் சென்ற குழந்தைகள் அந்த சிலையை கண்டனர். சிலைக்குப் பூசை செய்து விளையாடினர். இந்த தகவல் ஊர்மக்களுக்கு தெரியவந்தது. அங்கிருந்து கோயிலுக்கு எடுத்து வருவதற்காக முயன்றபோது ஒரு பெண்ணுக்கு அருள்வந்து சிலையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறினார்.

மக்கள் பூ கட்டிப் பார்த்தனர். அதிலும் சமயபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றே தெரிந்தது. எனவே ஒரு யானையை வரவழைத்து அந்த யானை எங்கு போய் நிற்கிறதோ அங்கு கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டது. யானையும் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு இடத்தில் படுத்துவிட்டது. அந்த இடத்தல் சிலையை வைத்துப் பூசை செய்தனர். இவளே ஆதிமாரியம்மன் எனப்பட்டாள். சமயபுரத்தில் இருக்கும் அம்மன் இவளது மகளாகக் கருதப்படுகிறாள்.

இப்போதும் திருவிழாக் காலத்தில் சமயபுரம் மாரியம்மன், சமயபுரத்திலிருந்து பல்லக்கில் இங்கு வந்து தன் தாயைக் கண்டு செல்கிறாள்.