Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில், கணக்கன்பாளையம்

அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில், கணக்கன்பாளையம் – 638452,(கோபிசெட்டிபாளையம்), ஈரோடு மாவட்டம்.
********************************************************************************************

+91-4285-318 271, 94430 08679 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

 

மூலவர்: – மலையாள பகவதி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – கணக்கன்பாளையம்

மாவட்டம்: – ஈரோடு

மாநிலம்: – தமிழ்நாடு

நூறு ஆண்டுகளுக்கு முன், கர்நாடக மாநிலத்தில் விளையும் மஞ்சளை விற்பதற்க்காக, ஒரு வியாபாரி மஞ்சள் மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றி மலைப்பாதை வழியாக ஓட்டி வந்தார். அப்போது சமநிலையான பாரம் இல்லாததால் மாடு தடுமாறிச் சென்றது. இதனால் அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் ஏதேனும் பாறாங்கற்களை ஏற்றலாம் என நினைத்து மலைக்காட்டிற்குள் சென்றார் அந்த வியாபாரி.

அங்கு ஒரு கல் மினுமினுப்புடன் தென்பட்டது. அதனை எடுத்து மாட்டு வண்டியின் பொதியினுள் வைக்கப் பாரம் சரியானது. பின்னர் வியாபாரி வண்டியை சிரமமில்லாமல் ஓட்டி வந்தார். கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் மலையடிவாரப் பகுதிக்கு வந்ததும் மாட்டுவண்டி பொதியினுள் இருந்த மினுமினுப்பான கல் கீழே விழுந்துவிட்டது. ஆனால் வண்டியின் பாரத்தில் மாற்றம் எதுவும் தெரியாததால், வியாபாரி கல் கீழே விழுந்ததைக் கவனிக்கவில்லை.

அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், மேட்டு மகாதானபுரம்

அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், மேட்டு மகாதானபுரம் -639 106, கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.
*********************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மகாலட்சுமி

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்: – கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம்

மாவட்டம்: – கரூர்

மாநிலம்: – தமிழ்நாடு

பெருமிழலை நகரை ஆண்ட மன்னரின் பெயர் சிவபெருமான். இவரிடம் பணிபுரிந்தவர் குரும்பநாயனார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். அந்த ஊர் மக்கள் பக்தியில் சிறந்து விளங்கினர். குரும்பநாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரை வணங்கி வந்தார். அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். இவர் ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் குரும்ப இனத்தில் பிறந்தார்.

தினமும் சிவனடியார்களுக்கு வேண்டிய உணவு, உடை மற்றும் பொருட்களை ஒரு கம்பளியில் கட்டி எடுத்துவந்து ஊர் எல்லையில் கொடுத்து அனுப்புவதை முதல் கடமையாகக் கொண்டிருந்தார்.

குரும்ப இனத்தவரின் தொழில் ஆடு மேய்ப்பது ஆகும். ஆட்டின் முடியில் செய்த கம்பளியில் அந்த பொருட்களை எடுத்து வருவார். எல்லாரிடமும் பணிவாக நடந்து கொள்வார்.

இறைவனின் பாதங்களைத் தன் நெஞ்சில் வைத்து வணங்குவதே தன் கடமை என எண்ணி வாழ்ந்து வந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் மீது அன்புகொண்டு வணங்கி வந்ததால் இவருக்கு அட்டமாசித்திகள் கிடைத்தன. “நமசிவாயஎன்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓயாமல் ஓதி வந்தார்.