Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர்

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம்.
*******************************************************************************************

+91- 4328 2325444 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணிக்கு சந்நிதி திறக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். பிற்பாடு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம்.

மூலவர்: – மதுரகாளி

தல விருட்சம்: – மருதமரம்

தீர்த்தம்: – திருக்குளம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்: – சிறுவாச்சூர்

மாவட்டம்: – பெரம்பலூர்

மாநிலம்: – தமிழ்நாடு

சிலப்பதிகார நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மன அமைதி கொள்ளாமல் இத்தலம் வந்து அமைதி கொண்டாள் என்று செவிவழிச் செய்திகள் கூறகின்றன. சிறுவாச்சூரின் வழிபாட்டு தெய்வம் செல்லியம்மன் ஆகும்.

ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இந்த அம்மனைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளான். மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு தங்க இடம் கேட்கிறாள். செல்லியம்மனோ தன்னை மந்திர வலிமையால் தொல்லைப்படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறுகிறாள்.

மதுரைக் காளியம்மனோ தான் அதற்குத் தக்க வழி செய்வதாகக் கூறித்தங்குகிறாள். வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள்.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உடுமலைப்பேட்டை

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உடுமலைப்பேட்டை-642 126, கோயம்புத்தூர் மாவட்டம்.
*********************************************************************************************************

+91-4252- 224 755 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

தீர்த்தம்: – கிணற்றுநீர்

ஆகமம்/பூஜை: – சைவாகமம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – உடும்புமலை, கரகிரி

ஊர்: – உடுமலைப்பேட்டை

மாவட்டம்: – கோயம்புத்தூர்

மாநிலம்: – தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு, பக்தர் ஒருவர் தாம் எங்கே செல்கிறோம் என்ற நினைவே இல்லாமல், தானாகவே வனப்பகுதிக்குள் சென்றார். நீண்ட தூரம் சென்ற அவர் ஓரிடத்தில் நினைவு திரும்பி நின்றபோது, அங்கே சுயம்பு வடிவில் அம்மன் இருந்ததைக் கண்டார்.

ஊருக்குத் திரும்பிய அவர் வனத்தில் அம்மனைக் கண்டதை மக்களிடம் கூறினார். அதன்பின், மக்கள் ஒன்று கூடி அம்மன் இருந்ததை வனத்தைச் சீரமைத்து கோயில் எழுப்பினர்.

பிரகாரத்தில் செல்வகணபதி, செல்வமுத்துக்குமரன், தலவிருட்சத்தின் அடியில் அட்டநாக தெய்வங்கள் உள்ளன.

பெயர்க்காரணம்:

அரைச்சக்கரவடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரபுரிஎன்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலைஎன்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்று மருவியது.

கோயில் மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. தல விநாயகரின் திருநாமம் சக்தி விநாயகர்.

இத்தல மாரியம்மன் பக்தர்களின் மனக்குறைகளை தீர்க்கும் அம்மனாக அருள்பாலிக்கிறார்.