Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில், கவுகாத்தி

அருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில், தி காமாக்யா டெப்யூட்டர் போர்டு, காமாக்யா டெம்பிள் காம்ப்ளக்ஸ். கவுகாத்தி – 781 010. அசாம் மாநிலம்.
************************************************************************************************************

+91- 361- 273 4624, 273 4654 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி, 2.30 முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும்.

மூலவர்: – காமாக்யாதேவி

தீர்த்தம்: – பிரம்மபுத்திரா

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – கவுகாத்தி

மாவட்டம்: – கவுகாத்தி

மாநிலம்: – அசாம்

மன்மதனை(காமன்) சிவபெருமான் எரித்த இடமாதலாலும், காமன் தனது சுயரூபம் பெற்ற பிறகு விசுவகர்மாவைக் கொண்டு கட்டிய கோயில் என்பதாலும் இந்த இடம் காமரூப்என அழைக்கப்படுகிறது.

சக்தி பீடங்கள் 51 என நூல்கள் சொல்கின்றன. அதில் இத்தலம் முதல் தலமாகும். இந்த பீடங்களில் யோனி பீடம் அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா ஆகும்.

அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாசல் என்ற மலை அமைந்திருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. புராணங்களில் இந்த இடம் நரகாசுரனால் ஆளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மலை அடிவாரத்தில் நான்கு பக்கங்களிலும் சொர்க்கபுரி வாயில், அனுமன் வாயில், புலிவாயில், சிங்கவாயில் என்ற நான்கு நுழைவு வாயில்களை நரகாசுரன் அமைத்திருந்தான்.

பத்தாம் நூற்றாண்டில் இக்கோயில் அசாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்டது. 1665ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. வெளிப்பிரகாரத்தைப் பார்த்தால் மட்டுமே கோயில் என்று இதை சொல்ல முடியும். உள்ளே சென்றால் ஒரு குகை மட்டுமே இருக்கிறது. அதற்குள் பத்து படிக்கட்டுகள் கீழே இறங்க வேண்டும். உள்ளே இருளாக இருக்கும். மின் விளக்குகள் கிடையாது. மிகவும் பொறுமையுடன் குகையின் சுவரை பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி கீழே இறங்க வேண்டும். பாதாளத்தில் கருவறை அமைந்துள்ளது. அங்கே ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டும் எரிகிறது. அந்த வெளிச்சத்தில்தான் காமாக்யாவுக்கு பூஜை நடத்தப்படுகிறது.

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், காளியூர்

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், காளியூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
*************************************************************************************

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – காளியம்மன்

அம்மன்: – துர்கை, காளியம்மன், மாரியம்மன், அஷ்டபுஜகாளி, பாலசுகாம்பாள், அபிராமி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – காளியூர்

மாவட்டம்: – நாகப்பட்டினம்

மாநிலம்: – தமிழ்நாடு

இந்த ஊர் ஒரு காலத்தில் சீனிவாசபுரம் என அழைக்கப்பட்டது . திடீரென ஒரு நாள் ஊர்மக்கள் பலரும் நச்சுக்காய்ச்சலாலும், வாந்திபேதியாலும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ளம் வந்து வயல்களுக்குள் பாய்ந்து பயிர்களையெல்லாம் அழித்தது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் ஊர் எல்லையில் தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் துயர்களைப் போக்க இங்கு காளி எழுந்தருளினாள். மகிசாசுரனை வதம் செய்த தேவி எருமையென வந்த அசுரனின் தலை பூமியில் விழக்கூடாது; விழுந்தால் பூமிக்கு ஆபத்து என்று அசுரனின் தலையைக் கொய்ததுடன், பூமியில் விழாமல் கரங்களில் ஏந்தி நின்றாளாம். அப்படி அவன் நின்ற இடம் தான் கிடாத்தலைமேடு என்று திகழ்கிறது. இங்கே காளிதேவி, துர்கையாக எழுந்தருள்கிறாள். மிகுந்த உக்கிரமும், அளவற்ற கருணையும் கொண்ட துர்க்கையாக அனைவரையும் காக்கிறாள். ஊரின் நுழைவுவாயிலில் மந்தகரை காளியம்மனும், இன்னொரு எல்லையில் நத்தம் மாரியம்மனும், வடக்கு எல்லையில் வடகாளியம்மனும் வீற்றிருக்கின்றனர். இந்த வடகாளியம்மனுக்கு வெக்காளியம்மன், பத்ரகாளியம்மன் என பல திருநாமங்கள் உண்டு.

காளியூர் கிராமத்தின் நான்கு எல்லைகளிலும் நான்கு தேவியராகக் கோயில் கொண்டு ஊரை செழிக்கச் செய்வது மட்டுமின்றி, ஊருக்கு நடுவிலும் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள் எட்டுக்கை காளி. வடக்கு எல்லையில் உள்ள வடகாளியம்மன் கோயிலில் சப்தகன்னியர்கள் பரிகார தெய்வங்களாக உள்ளனர். ஐந்து காளிகளும், இரண்டு அம்பிகைகளும் அருள்பாலிக்கும் அற்புத தலம். கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியிருந்தாலும் சாந்தமுகமாக காட்சியளிக்கிறாள். இவளை மகாகாளி எனப் போற்றுகின்றனர்.