Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு கன்னிமாரம்மன் கோயில், மடத்துப்பாளையம்

அருள்மிகு கன்னிமாரம்மன் கோயில், மடத்துப்பாளையம், திருப்பூர் மாவட்டம்
**************************************************************************************

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மடத்துப்பாளையம் கிராமத்தில் எட்டு தலை முறைக்கு முன் கவுண்டய்யனும், அவர் தங்கை வள்ளி அம்மாளும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருக்க திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்தார்கள். தினமும் ஆடுமாடுகளை மேய்ச்சலுக்காக காட்டுக்கு ஓட்டிச் செல்வது கவுண்டய்யனின் வேலை. காட்டில் இருந்து திரும்பும் அண்ணனுக்காக சுடச்சுடச் சோறாக்கி வைத்திருப்பது வள்ளியம்மாள். நாட்கள் பல கழிந்தன.

இந்த நிலையில் தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடும் வறட்சி ஏற்பட்டது. ஆடுமாடுகளுக்கு குடிக்கவும் தண்ணீர் கிடைக்காத நிலை. தங்கையை, உறவினர் ஒருவரது பொறுப்பில் விட்டு விட்டு, ஆடுமாடுகளைத் தானே ஓட்டிக் கொண்டு பொள்ளாச்சிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் கவுண்டய்யன். ஆனால், அவரைப் பிரிய மனம் இல்லாத வள்ளியம்மாள் தானும் உடன் வருவதாகக் கூறினாள். எனவே, அவளையும் அழைத்துச் சென்றார் கவுண்டய்யன். இருவரும் பொள்ளாச்சியிலேயே தங்கினர். ஒருநாள், ஆடுமாடுகளை மேய்க்க அருகில் இருந்த மலைப் பகுதிக்குச் சென்றனர். அங்கே, எதிர்பாராத விதமாக வள்ளியம்மாளைப் பாம்பு கடித்து விட்டது. துடிதுடிக்கத் தன் கண்ணெதிரிலேயே தங்கை இறந்துபோனதைக் கண்டு, கலங்கிய கவுண்டய்யன் மயங்கிச் சரிந்தார்.

சற்று நேரத்துக்குப் பிறகு கண் விழித்தவர், இனியும் இந்த ஊரில் இருக்கக் கூடாது என்ற முடிவுடன் சொந்த ஊருக்கே வந்து சேர்ந்தார். ஆனாலும் தங்கை இறந்த சோகத்திலிருந்து அவரால் மீள முடியவில்லை. ஊண், உறக்கமின்றித் தவித்தார். “தங்கச்சி நெனைப்புலேயே இவனும் போய்ச் சேர்ந்திடுவான் போலஎன்று ஊர்மக்கள் வருந்தினர்.

அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில், தாரமங்கலம்

அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில், தாரமங்கலம்சேலம் மாவட்டம்.
***********************************************************************************************

+91- 4290 – 252 100 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன், காளியம்மன்

அம்மன்: – இரட்டை அம்பாள்

தல விருட்சம்: – வேம்பு

தீர்த்தம்: – சஞ்சீவி தீர்த்தம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – கண்ணனூர்

மாவட்டம்: – சேலம்

மாநிலம்: – தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு, கேரளாவிலுள்ள கண்ணனூர் மாரியம்மனை, சில பக்தர்கள் ஒரு குதிரையில் வைத்து இவ்வழியே கொண்டு சென்றனர். அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது இருட்டிவிடவே, ஓய்வெடுப்பதற்காக தங்கினர். அன்றிரவில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய மாரியம்மன், தன்னை அமர்த்தியிருக்கும் இடத்தின் அடியில் சுயம்பு வடிவில் இருப்பதாகவும், அந்த இடத்திலேயே கோயில் கட்டும்படியும் கூறினாள். அந்த பக்தர் கனவில் கண்டதை மக்களிடம் கூறினார்.

அதன்படி, அம்பாள் சிலை இருந்த இடத்தின் அடியில் தோண்டிப் பார்த்தனர். அவ்விடத்தில் அம்பாள் சிலை இருந்தது. அவளை, அங்கேயே வைத்து கோயில் கட்டினர்.

கண்ணனூரில் இருந்து அம்பாளை கொண்டு வந்தபோது கிடைக்கப்பெற்ற அம்மன் என்பதால் இவள், “கண்ணனூர் மாரியம்மன்என்று அழைக்கப்பட்டாள். கண்ணனூரில் இருக்கும் மாரியம்மனின் அம்சத்தை இக்கோயிலில் காணலாம்.

தாரமங்கலத்தை சுற்றியிருக்கும் 18 பட்டிக்கும் இந்த அம்பாள் குலதெய்வமாக இருக்கிறாள்.

பிரகாரத்தில் விநாயகர் மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளன. இக் கோயில் கேரள கோயிலின் அமைப்பில் இருப்பது சிறப்பு. இங்கு அம்மனுக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.